Monday, July 4, 2016

கொடூரக் கொலைகள்

மேட்டூர் அருகே 7 வயது குழந்தை கற்பழித்து கொலை

# சுவாதி கொலையினை விட 100 மடங்கு கொடூரமான விஷயம் இது, ஆனால் அது சென்னையும் அல்ல, கொல்லபட்ட இடம் ரயில் நிலையமும் அல்ல,வெட்டுபட்டு செத்தாலும் இனி சென்னையில் அதுவும் பொதுஇடத்தில்தான் சாகவேண்டும்

# குழந்தைகளுக்கு இந்த நாட்டில் இவ்வளவுதான் பாதுகாப்பும் சட்டமும் என்றால் வருங்காலம் செழிக்குமா? மேலைநாடு என்றால் இந்நேரம் தேசம் அலறி இருக்கும்.

# இங்கோ ராம்குமார் கைதுகுறித்து ஆளுக்கொரு புலனாய்வு கதை சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அக்குழந்தையினை நினைக்க நேரம் ஏது?

# இவ்வகை குற்றவாளியினை பெரு நகரத்தில் பொது இடத்தில் கதற கதற கொல்லாமல் விட கூடாது, இவனைபோன்றவர்களை மிருகம் கூட இனத்தில் சேர்க்காது, சாத்தான் கூட நரகத்தில் சேர்க்காது.

No comments:

Post a Comment