Wednesday, July 27, 2016

அடக்குனா அடங்குற ஆளா நீர்...





முதல்வர் வீட்டில் தங்கியிருந்து, கபாலி படத்தின் உரிமையை பெற்று, கோடிக் கணக்கில் லாபம் அடைந்தவருக்கு, எந்த தண்டனையும் கிடையாதா?' : கலைஞர் கேள்வி

ஆமாம், ஒரு படம் வாங்கி சம்பாதித்தால் அது எவ்வளவு பெரும் தவறு தண்டனை, அய்யகோ என்ன கொடுமை இது.

ஆனால் மேகலா பிக்சர்ஸ் தொடங்கி இவர் அள்ளியதாகட்டும், சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன் என இவர் குடும்பத்த்தார் வைத்திருக்கும் கம்பெனிகள் ஆகட்டும் அதனை பற்றி எல்லாம் நாமும் பேசகூடாது, அவரும் பேச மாட்டார், ரோபோ படத்திற்காக தன் பேரன்களுடன் இவர் போஸ் கொடுத்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வரக்கூடாது


சினிமா கொள்ளை என்பதை தமிழ் உலகிற்கு சொல்லி, காசு முதல் முதல்வர் பதவி வரை அள்ளலாம் என செய்துகாட்டியது யார்?

ஆனாலும் ஒரே அறிக்கையில் பல மாங்காய் அடித்திருக்கின்றார், அதாவது ஜெயலலிதாவினை கேள்வி கேட்டாயிற்று, கபாலி வெற்றி படம் என ரஜினியினை மகிழ்வித்தாயிற்று, ஒரு வேளை விநியோகிஸ்தர்கள் பின்னாளில் புலம்பினால் சசிகலா கோஷ்டியினைரை இப்பொழுதே அடையாளம் காட்டியாயிற்று.

இவர் கபாலி ரிசல்ட் தெரிந்து விநியோகிஸ்தர்களுக்கு ஏதோ சொல்ல வருகின்றார் என்பது மட்டும் புரிகின்றது

# அடக்குனா அடங்குற ஆளா நீர்...
# கலைஞர்டா







No comments:

Post a Comment