Saturday, July 23, 2016

எது பாதிக்கின்றதோ அதனைத்தான் எழுத முடியும்

24-07-2016

மேட்டுகுடி கூப்பாடு என சிலர் வந்திருக்கின்றார்கள், பாரதியும் மேட்டுகுடிதான், அம்பேத்கரை படிக்க வைத்த பரோடா மன்னரும் மேட்டுகுடிதான் என்பதை மறந்துவிடுகின்றார்கள், நல்லவர்கள் எல்லா இடத்திலும் உண்டு

கொஞ்சம் பேர் தலித் அரசியல் பேச ரஞ்சித்தை விட்டால் ஆளில்லை என எனக்கே அறிவுரை சொல்கின்றார்கள். பாரதி கண்ணம்மா என்ன கருத்து சொன்னது,

பருத்தி வீரனின் ஒன் லைன் கதை என்ன?


அவை நிச்சயமாக தலித் வகை படங்கள்தான், தமிழகமே அப்படம் பார்த்து அழவில்லையா? எல்லொர் மனதையும் பாதிக்கவில்லைய்யா? கவனித்து பார்த்தால் இன்னும் ஏராளமான அவ்வகை படங்கள் தமிழகத்தில் உண்டு,,

பாரதி கண்ணம்மா முதலிடம்

அதனை விடவா கபாலியில் ரஞ்சித் கிழித்துவிட்டார்





22-07-2016

ஒழுங்காக புலிகளை பற்றி மட்டும் எழுது என ஆணையே இடுகின்றார்கள், காரணம் தாழ்த்தபட்டவன் வலி தெரியாதாம்?

யாருக்கு? ஒரு காலத்தில் சட்டை கூட அணியகூடாது, செருப்பு போட கூடாது, பெண்கள் மேலாடை அணிய கூடாது என பாடாய் படுத்தபட்ட் இனத்தில் இருந்து வந்தவனுக்கா தாழ்த்தபட்ட வலி தெரியாது?

நீங்கள்தான் அடக்கபட்ட சாதியா, உரிமை மறுக்கபட்ட சாதியா, நாங்கள் இல்லையா? எல்லாம் சூத்திர பிரிவே

இன்று கல்வியில் யாருக்கு உரிமை மறுக்கபடுகின்றது, அல்லது அடக்கி வைக்கபடுகின்றது என்றால் நிச்சயம் நமக்கல்ல, கத்த வேண்டியது நாம் அல்ல.

இது மாறிவிட்ட காலங்கள், எல்லோருக்கும் எல்லாம் வாய்க்கின்றது, எல்லொருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கின்றது, பழைய ஆண்டான் அடிமை இம்சைகள் எங்கே இருக்கின்றது? ஜமீந்தார் நிலத்தில் களை எடுத்தால்தான் சாப்பாடு என்று யார் இருக்கின்றார்கள்? சொல்லபொனால் நிலம் வைத்திருப்பவன் எல்லாம் ஆப்ரிக்காவில் இருந்து தொழிலாளர் கிடைப்பார்களா எனும் அளவிற்கு நிலை மோசம்.

சிற்சில சம்பங்கள் எங்காவது நடக்கலாம், இது உலகமுழுக்க உள்ள பிரச்சினை, பிரச்சினை இல்லா சமுதாயம் என ஒரு இனத்தை காட்டுங்கள், யூத இனம் வரை உண்டு

பிரச்சினைகள் குறைவான சமூகம் உண்டே தவிர, இல்லாத சமுகம் என்று எது உண்டு

ரஜினி படத்தின் கதை இப்படி இருந்தது, இப்படியான கதைக்கு ஏன் சம்பந்தம் இல்லா வசனங்கள்? மனக்கோளாறா என சொன்னால், உனக்கு ரஞ்சித் வளர்ச்சி பிடிக்கவில்லை தலித் வளர்வது பிடிக்கவில்லை ஏய் மேட்டுகுடி என பொங்கி, ஒழுங்காக ஈழம் எழுது என்கின்றார்கள்

நான் ஈழம் மட்டும்தான் எழுதவேண்டுமா? எனக்கு தொன்றுவதை எழுதமுடியுமா? இல்லை ஒவ்வொருவருக்குமாக எழுத முடியுமா? இன்று ஒரு அறிவுசூரியன் கத்துகின்றது, உனக்கு தேவை பணம்தானே

அட மானிட கல்லே, எனக்கென்ன மார்க் படியளக்கின்றானா? ஒரு பைசா தேறும், ஏன் பதிகிறேன் என சிலநேரம் எனக்கே தெரியவில்லை, என்ன கிடைக்கின்றது ஒன்றுமில்லை

ஆகவே நண்பர் குழாமே, உங்கள் ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல எழுத என்னால் முடியாது, என்னால் மட்டுமல்ல ஆண்டவானலும் முடியாது

இந்த சமூகத்தை கவனியுங்கள், தாழ்த்தபட்ட மக்கள் மேலெழுந்துதான் வருகின்றார்கள், தலைமுறை மாறிகொண்டிருக்கின்றது அம்பேத்கர், காந்தி ஆசைபட்டது எல்லாம் இதுதான், நடக்கின்றது

இது நடக்கவேண்டும் என அப்பெரியவர்கள் கனவு கண்டது எல்லாம் அபப்டி வளர்ந்தால் இம்மக்கள் வளர்வார்கள், இந்நாட்டுக்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்ற நாட்டுபற்றே அன்றி வேறல்ல,

அந்த நாட்டுபற்றும், சமூக அமைதியும்தான் தேவையே தவிர , இந்நாடு கொடுக்கும் வாய்ப்பில் அதனைத்தான் செய்யவேண்டுமே தவிர, பழம் கால சம்பவங்களை கொண்டு அரசியல் அல்ல.

அப்படி எல்லோரும் சொல்லிகொண்டிருந்தால் இந்நாடு நாடாக இருக்காது

அப்படி சிந்திப்பவர்கள் மட்டும் என்னிடம் பேசுங்கள், நான் பதிலளிக்கின்றேன்

மாறாக பிரிவினை வாதம், புலி பூச்சாண்டி, திராவிட பிரிவினை, தலித்தியம், காஷ்மீர் ராணுவ அடக்குமுறை என்று பித்ற்றுபவனெல்லாம் செல்லலாம்.

அப்படியே காஷ்மீர் மக்களுக்கு அநீதி, ராணுவ அடக்குமுறை தவறு என சொல்லி அம்மாநிலம் விடுதலை பெற்றால், தமிழகமும் அப்படி விடுதலைபெறும் என சிலர் மனப்பால் குடிக்கின்றனர், நடக்காது எனினும் கனவு, அதாவது ராணுவ அடக்குமுறை தவறாம்

சரி, அப்படி தமிழகம் தனிநாடானாலும் என் பாண்டிய நாட்டு விடுதலையினை நான் கோரினால் உடனே தமிழகம் ராணுவத்தை வைத்து எம்மை அடக்குவீர்களா மாட்டீர்களா?

ஆனால் நாங்களும் தமிழர் கட்சி நிச்சயம் கேட்கும்

அப்படியானால் என்ன? காஷ்மீரில் நடந்தால் தவறு தமிழகத்தில் நடந்தால் சரி என்பீர்களா?

அதனால் சொல்கிறேன், இம்மாதிரியானவர்கள் ஓடிவிடலாம் , அதனை விட்டு ஒழுங்காக ஈழம் எழுது என சொல்ல நீங்கள் யார்?

நீங்கள் சொல்லித்தான் நான் எழுதினேனா? அல்லது நீங்கள் சொன்னவுடன் நிறுத்திவிடுவேனா

எது பாதிக்கின்றதோ அதனைத்தான் எழுத முடியும், நீங்கள் சொல்லி அல்ல.




"நான் பெரியாரை ஒன்றும் சொன்னதில்லை, வந்தேறி என யாரையும் சொன்னதில்லை, நீங்கள் எல்லாம் கண்டதை பேசி கட்சி பெயரை கெடுத்துவிட்டீர்கள், இனி என் அனுமதியின்றி யாரும் பேசகூடாது எழுத கூடாது.மாற்று மொழிபேசும் மக்களை பரிவோடு அணுகவேண்டும்" : உள்ளாட்சி தேர்தல் குறித்து சீமான் கட்சிக்குள் உருக்கம்

இவர் என்னவெல்லாம் பேசினார், எப்படியெல்லாம் சீன் உருவாக்கினார் என்பதெல்லாம் வீடியோ முதல் எல்லா ஆதாரங்களும் உண்டு, ஆனாலும் எப்படி எல்லாம் சீறிய அக்கினி குஞ்சி இப்படி ஐஸ்கட்டியாக வோட்டுக்கு குளிர்ந்துவிட்டது பார்த்தீர்களா


குறித்து வைத்துகொள்ளுங்கள் இன்னும் கொஞ்சநாளில் பிரபாகரன் படத்தை தூர எறியும் திட்டம் இப்பொழுதே தெரிகின்றது, அதன் பின் என்ன? காங்கிரசுடன் கூட்டணிதான்

இவரை எல்லாம்............ வேண்டாம் நீங்களே முடிவு செய்துகொளுங்கள்

No comments:

Post a Comment