Thursday, July 21, 2016

இந்திய ராணுவத்தை கூலிப்படை என சொன்ன சைமன்





இந்திய ராணுவத்தை கூலிப்படை என சொன்ன சைமன் எனும் சீமானை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்நாட்டை காக்கும் அந்த தெய்வங்களை கொச்சைபடுத்திய இந்த எச்சையினை இந்திய தேசிய குடிமக்கள் அனைவரும் கண்டிக்க கடமைபட்டுள்ளார்கள்.

ஈழத்தில் பிரபாகரன் மணலாற்றில் சுற்றி வளைக்கபட்ட நிலையிலும், கொல்வதற்கான உத்தரவு எமக்கு இல்லை என சொல்லி தயங்கி நின்றது எமது ராணுவம், அது கூலிபடையா?


எது கூலிபடை?

கூலிக்கு சினிமா எடுப்பதும், கூலிக்கு ஈழதமிழனுக்காக மாரடிப்பதும் கூலியே அன்றி, உயிர் கொடுத்து தேசம் காக்கும் தியாகம் ஆகாது.

இது மிக கடுமையாக கண்டிக்கதக்கது, அந்த ராணுவத்தின் பாதுகாவலில் ஹாயாக சென்னையில் அமர்ந்துகொண்டு இப்படி மானமுள்ளவன், அறிவுள்ளவன் பேசுவானா?

எமதருமை கடற்படையே, அப்படியே இவரை இலங்கையில் விடுங்கள், அங்கே தெரியட்டும் இந்திய ராணுவத்தின் அருமை.

அது எப்படி சைமன்,?, ராஜிவ் அனுப்பிய அமைதிபடை, சோனியா நடத்திய இறுதி யுத்தம், கலைஞர் கொடுத்த ஒத்துழைப்பு

ஆனால் காஷ்மீரில் நடப்பது மட்டும் கூலிப்படை தாக்குதலா?

2009ல் கைது செய்யபட்டால் உங்களை கைது செய்தால் கலைஞர் அரசு, இனி கைது செய்தால் அது கூலிபடையா?

என்னய்யா இப்படி நடுங்குகின்றீர்?





காஷ்மீரை ஆக்கிரமித்து, பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் வன்முறை வெறியாட்டம் , புர்கானை கொன்றது கூலிபடை என சீமான் கண்டனம்

# நாம் சொல்லவில்லை, எல்லாம் முடிந்த பின் வந்து ஒப்பாரி வைப்பதுதான் அங்கிள் அரசியல் இலக்கணம் என்று, இதோ எல்லாம் முடிந்ததும் வந்துவிட்டார், வரவேண்டிய நேரத்திற்கு ஒரு நாளும் வரமாட்டார்.

தமிழகத்தில் கொடியன்குளம் படுகொலைகள் , தாமிரபரணி ஆற்றில் பலபேர் சாகடிக்கபட்டபொழுதெல்லாம் அங்கிள், ஈழத்தில் சிங்களபடைகளுடன் மோதிகொண்டிருந்ததால் குரல் எழுப்பமுடியாமல் போனது வரலாற்றுறுக்கொடுமை.


மேலவளவு படுகொலைகள், இன்னும் கவுரவ கொலைகள் எல்லாம் நடக்கும் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அங்கிளுக்கு கவலை இல்லை, ஆனால் தமிழகம் தாண்டி யாராவது செத்தால் அங்கிள் சும்மா விடமாட்டார்.

அப்படியும் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள மற்ற இரு நாடுகளையும் விட்டுவிட்டு இந்திய பகுதியில் இருந்து மட்டும் வெளியேறவேண்டுமாம்.

மட்டகிளப்பினை ஈழமாக அறிவித்துவிட்டு, யாழ்பாணத்தை சிங்களனுக்கு கொடுத்துவிடலாம் என்பது போலத்தான் இதுவும்.

அது என்ன அங்கிள் கூலிப்படை? வெளிநாட்டு கூலிக்காக அடைக்கலம் கொடுத்த நாட்டின் தலைவரை கொன்றது போன்ற கூலிபடையா? .

இது ராணுவம், எமது பெருமை மிகு ராணுவம்.

ஏதோ பயம் அங்கிளுக்கு, நாளையே தூக்கி உள்ளே வைத்தால், என்னை சிறைபடுத்தியது கூலிபடையே அன்றி ஜெயலலிதா அரசோ, மோடி அரசோ அல்ல என சொல்லிகொள்ளலாம் அல்லவா? அந்த எச்சரிக்கை

சொந்த தமிழின போராளிகளை கும்பல் கும்பலாக புலிகள் கொன்றபோது அமைதியாக படமெடுத்துகொண்டிருந்தவன் எல்லாம் காஷ்மீரில் மனிதநேயம் பேசவந்ததுதான் கொடுமை.

வெரி பன்னி பொலிட்டிசியன்.







No comments:

Post a Comment