Monday, July 11, 2016

சிதறல்கள்..




பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கடுமையாக கோபபட்டு குற்றஞ்சாட்டினார்

# அதே கோபத்திலில்தான் கலிங்கபட்டி கோபாலும், திருட்டு முருகன் காந்தியும் இருக்கின்றார்கள், அடுத்தமுறை அங்குகோபாலும், முருகனும் அடுத்தடுத்து ஸ்டால் அமைப்பார்கள், அதற்கடுத்த வருடம் அக்கா வீரலட்சுமியின் ஸ்டாலும் அமையலாம். தமிழீழத்தை நாடு கடத்தி சென்றவரின் கோபம் இன்னும் அதிகமாகும்
,
# ஒரு காலத்தில் ஈழபோராட்டத்தின் ஒரே பிரதிநிதி நாங்கள் என்றன புலிகள், இன்றோ வசூல் பிரிப்பதில் ஏன் இத்தனை கோஷ்டி, நாங்கள் மட்டுமே பிரிப்போம் என்கிறார் முன்னாள் புலி. விரைவில் வசூல் தகராறில் அங்கிள் சைமனின் கோஷ்டி அடிவாங்க போகும் நாள் தொலைவில் இல்லை.

 




இன்னும் காஷ்மீரிய துப்பாக்கி சூட்டையும், அந்த கலவர சூழலையும் கண்டித்து அங்கிள் சைமன் இன்னும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே ஏன்?

காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரின் யாசின் மாலிக்கினை தமிழகத்திற்கே அழைத்து வந்து இந்தியாவிற்கே சவால்விட்ட அங்கிள், இப்பொழுது மகா மவுனமாக இருப்பது எப்படி?

ஒருவேளை நேபாளம் வழியாக, தொப்பி அணிந்து, மீசை எடுத்து கருப்பு கண்ணாடி போட்டு காஷ்மீருக்குள் நுழைந்துகொண்டிருப்பாரோ? இந்திய ராணுவம் குறுகுறுவென்று வேறு பார்த்து தொலையுமே..


# அன்னார் வாய்திறப்பாரா இல்லையா தெரியாது, ஆனால் யாசின் மாலிக்கோடு அங்கிள் இருக்கும் படம் காஷ்மீரெங்கும் பேனராக பரவுகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அதனை கண்காணிக்கின்றது, அதாவது சீமான் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பார் என காஷ்மீரிய மக்கள் நம்புவதாக அவை கருதுகின்றன‌

# இனி அங்கிள் அடிப்பார் பாருங்கள் பல்டி, அப்படி ஒரு வேகம் இருக்கும்




No comments:

Post a Comment