Saturday, July 16, 2016

அபத்த காணொளியும், அதற்கு பதிலும்....

 

இவரை போன்றவர்களுக்கு என்ன சிக்கல் என தெரியாது

ஊரோடு ஒத்துவாழ் என்ப்பார்கள், இது உலகம் எல்லா நாடும் எல்லா நாட்டோடும் ஒப்பந்தம் போடபட்டிருக்கும், அது பகைநாடுகள் என்றாலும் சரி, உறவுநாடுகள் என்றாலும் சரி.

இல்லை என்றால் தனியாக, ஒரு நாடு உறவும் இன்றி இன்னொருநாடு எப்படி வாழ முடியும்?


இவர் என்னமோ புதிதாக சொல்லவந்துவிட்டாராம், உலகமுழுக்க அமெரிக்காவிற்கு 38 ராணுவதளம் உண்டு, இந்தியா அமைக்க நினைத்தது இலங்கையில் ஒரு தளம் அவ்வளவுதான்.

ஒரு தீவுநாடு எனும் வகையில் பல பெரும் நாடுகள் அப்படி இலங்கையினை அணுகத்தான் செய்யும்

இந்தியா இல்லை என்றால், நிச்சயம் இன்னொரு நாடு வரும். வரட்டும்

ஆனால் அவைகள் எல்லாம் ஈழதமிழருக்காக பேசுமா என்றால் பேசாது, ஒரே ஒருநாடு உலகில் உண்டென்றால் அது இந்தியாதான்.

இது இவரைபொன்றோருக்கு பின்னர் புரியும்

இவை எல்லாம் சுத்த அபத்தங்கள் அன்றி ஒன்றுமில்லை, உண்மையில் இலங்கையின் பிரச்சினைக்கு காரணம் மேற்குலக வல்லரசுகளின் தலையீடு அன்றி வேறல்ல‌

இஸ்ரேல் கிபிர் விமானமும், ஐரோப்பாவின் நவீன கருவிகளின் கொடுப்பும் பற்றி இவர் வாய்திறந்தாரா? சீனா பற்றி சொன்னாரா? ஈரான், ரஷ்யா ஏன் சிங்களன் பின்னால் வந்தது?

நாம் மட்டும்தான் நெருங்குகின்றோமா, வேறு நாடுகள் இலங்கையினை நெருங்க நினைக்கவில்லையா?

இவர் சொல்வதெல்லாம் அபத்தங்கள்.


[facebook url="https://www.facebook.com/252970851735831/videos/263983823967867/" /]

1 comment:

  1. இவருக்கெல்லாம் Stanley Rajan பதில் சொல்ல வேண்டுமா....

    கணினி இருக்கு அதுல முன்புற கேமரா இருக்கு என்று ஏதோ பேசி , முக நூல் இருக்கவே இருக்கு என்று பதிவு செய்துள்ளார்....

    அவர் கூறும் நாடுகள் உலக வரை படத்தில் எங்கு இருக்கிறது என்பது கூட இவருக்கு தெரிந்து இருக்காது...

    இதை பார்த்து என் பொன்னான 3 நிமிடங்களை விரயம் செய்து விட்டேன்....

    ReplyDelete