பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்திவிட்டல்லாவா இங்கு வரவேண்டும்.
அங்கெல்லா அப்படி வாய்திறக்க முடியுமா விடுவார்களா?
காஷ்மீர் விடுதலை என்றால் அப்பகுதி காஷ்மீர் எல்லாம் பாக்கிஸ்தானுடம், சினாவுடனும் இருக்கட்டும், இந்திய காஷ்மீர் மட்டும் விடுதலைபெறட்டும் என்றால் எப்படி?
குஜராத்தின் ஜுனாகத் பகுதியில் முன்பு வாக்கெடுப்பு நடந்தது இஸ்லாமிய பகுதிதான், ஆனால் இந்தியாவோடு இணைந்தனர், அன்று ஓடிய பாகிஸ்தான் அதன் பின் வாக்கெடுப்பிற்கு வரவே இல்லை
ஆக காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் முதலில் ஆசாத் காஷ்மீரை விட்டு வெளியேறட்டும், சீனா அக்சாய் சின்னை விட்டு வெளியேறட்டும், அதன் பின் பேசலாம்
நடக்குமா?
அவர்கள் அப்பகுதி காஷ்மீரை அடக்கி ஆக்கி வைத்திருக்கும் சீரழிவிற்கு இந்தியா காஷ்மீர் எவ்வளவு பரவாயில்லை
இந்த தூண்டலுக்கு பெரும் காரணம் பாகிஸ்தான், அதுதான் முதல் காரணம்
No comments:
Post a Comment