Wednesday, July 20, 2016

சிதறல்கள்







பாகிஸ்தானில் முஷாரப் சொத்து முடக்கம், வங்கி கணக்கு முடக்கம் : அரசு அதிரடி

ஜனநாயகத்திற்கும் ராணுவத்திற்கும் அங்கு நடக்க்கும் மோதல் அப்படி, யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிராளியினை தொலைத்துவிடுவார்கள், சில சமயம் தூக்கு வரை செல்லும்

ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அதிமுகவிற்கும், அதிமுக ஆட்சியில் திமுகவின் சொத்துக்களுக்கும் ஒரு பாதிப்பும் வராது, இவர்கள் புரிந்துணர்வு அப்படி ,


அப்படியே தமிழ்தேசியம் பேசும் சீமான், திருமுருகன் போண்றோரை வாழவும் விட மாட்டார்கள், சாகவும் விட மாட்டார்கள். ஒரு மாதிரி கையாள்வார்கள்.

ஒரு வித ஒப்பந்தத்திலேதான் தமிழக அரசியல் நடக்கின்றது

ஆனால் ஊழல் கணக்கு மட்டும் மாறி மாறி சுமத்துவார்கள், நடவடிக்கை ம்ஹூம்













அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலையினை திறந்து வைக்க வருகின்றார் மோடி

மன்னார்குடியில் சசிகலா குடும்பத்து விழாவிற்கு வருவாரா ஜெயலலிதா? குடும்பத்தார் எதிர்பார்ப்பு

>> நாட்டுக்காக வாழ்ந்த ஒரு தமிழனுக்கு பாரதபிரதமர் சிலை திறக்கவும் ஓடிவரும் தேசத்தில்தான், அம்மாமனிதனின் இறப்பிற்கும் செல்லா அம்மாநில முதல்வர் எங்கோ ஒரு திருமண விழாவிற்கு செல்வதற்கு எதிர்பார்ப்பாம்.
> மாநில கட்சிகளை தடை செய்யவேண்டும் என ஒரு காலத்தில் இந்நாட்டில் ஒரு எண்ணம் இருந்தது ஏன்? என இப்பொழுது புரிகின்றது.





தமிழ்குடியின் மூத்த தலைமகனை கங்கை கரையிலே சிலையாக்கி அழகு பார்த்த திரு.தருண் விஜய் அவர்களை தமிழனாக வாழ்த்துவோம்

th

நாங்களும் தமிழர் கட்சியின் சார்பாக வாழ்த்துவோம்,.

கங்கை நதிபுறத்து கோதுமை பண்டமும், காவேரி வெற்றிலையும் அல்ல,


வள்ளுவன் சிலையும் சாணக்கியன் சிலையும் அவர்களின் வாழ்வியல் கலையும் கூட மாறு கொள்வோம்.











மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர்களுடன் இணைந்து திராவிட இயக்க வளர்ச்சிக்கு தாம் பாடுபடப்போவதாக திமுகவில் இணைந்த பழ.கருப்பையா தெரிவித்தார்.

அண்ணா திமுகவினை வளர்த்து ஆட்சியில் அமர்த்திவிட்டு அடுத்து திமுகவினை ஆட்சியில் அமர்த்த வந்துவிட்டார், அடுத்து வீரமணியின் திராவிட கழகத்தை வளர்த்து ஆட்சியில் அமர்த்துவார் என எதிர்பார்க்கலாம்,

எல்லாம் திராவிட கொள்கையே


மனதில் என்னமோ சே குவாரே என நினைப்பு இருக்கலாம், ஏதோ புரட்சி நடக்கும் இடங்களில் எல்லாம் சென்று போராடுவதை போல பேசிகொண்டிருக்கின்றார்.




சாதிய உணர்வு இருப்பதில் தவறில்லை : சரத்குமார்

வோட்டுக்கு மட்டும் அந்த உணர்வு வேண்டும் (:) ), அப்படி அந்த‌ உணர்விருந்தும் கிடைத்த ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனது யார் தவறு?




 

No comments:

Post a Comment