Wednesday, July 27, 2016

இந்திய ராணுவம் :தேசம் காக்கும் பெரும் படை

எவனோ ஒரு குறுக்கிய மனமுள்ளவன், கோணல் புத்திக்காரன் , ஆட்டு மூளையன் ஒரு பதிவினை போட்டிருந்தான், அதாவது இந்திய ராணுவத்தில் சாவதெல்லாம் தாழ்ந்த சாதியாம், ஒரு பிராமணன் கூட இல்லையாம்.

இது பார்பனிய இந்தியாவாம், சரி உன் பெரும் அபிமான ராஜராஜ சோழன் காலத்தில் என்ன நடந்தது? பிராமணனா சண்டையிட்டான்? எண்ணிக்கையில் மிக சிறிய கூட்டமான அது ஆலோசனைகளை சொன்னதே அன்றி, அவர்கள் யுத்தம் நடத்தியா ராஜ ராஜ சோழனை உயர்த்தினார்கள்? எல்லா அரசுகளும் மற்ற சாதியினரே, பிராமணர் என்பது சிறுபான்மை, எக்காலமும்

இவனை எல்லாம் என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை.


ராணுவம் என்பது தேசம் காக்கும் அமைப்பு, அதில் சாதி எல்லாம் இல்லை, மாறாக அவரவர் தகுதிக்கும் உடல்வாக்கிற்கும் ஏற்ப பொறுப்புகள் தரப்படும்.

பெரும் விஞ்ஞான மூளைகளை, பெரும் தந்திரோபயமான ஆட்களை துப்பாக்கி கொடுத்து முன்னால் நிறுத்த முடியாது, திறமையினை பொறுத்தே ராணுவம் செயல்படும்

சீக்கியர்களில் அடிமட்ட சிப்பாய்களும் உண்டு, பெரும் தளபதிகளும் உண்டு, தமிழக தென்னக தாழ்த்தபட்ட சாதிகள் கூட பெரும் கடற்படை பொறுப்பினை வகித்த பெருமைகள் உண்டு.

இந்த ஆட்டுமந்தை மண்டையன் இன்று சிந்திக்கவேண்டிய நாள், கலாம் பெரும் விஞ்ஞானி, அறிவாளி. ஆனால் என்ன செய்தார்? வந்தே மாதரம் என துப்பாக்கி தூக்கி காஷ்மீர் எல்லைக்கு ஓடினாரா?

அல்ல ஏவுகனைகள் தயாரிதார், ராணுவத்திற்கு கொடுத்தார். ராணிவத்தின் பணியினை எளிதாக்கினார். இதோ டெய்சி தாமஸ் இருக்கின்றார், நான் ஜான்சி ராணி என சொல்லி வாளெடுத்தாரா? அல்ல மாறாக பிரம்மோஸ் எனும் பாசுபதக்கனையினை உருவாக்கினார்

ஆக ராணுவம் என்பது சாதி,மதம், பிராமணியம், தலித்தியம் இன்ன பிற அழிச்சாட்டியங்கள் நிறைந்த கட்சியோ, அமைப்போ அல்ல, அது தேசம் காக்கும் பெரும் படை, நித்தமும் சாவை எதிர்பாக்கும் தியாக கூட்டம்

இந்திய ராணுவத்திற்காய் தன் வாழ்நாளை அர்பணித்து அந்த ராணுவத்தல் வணங்கபடும்

அப்துல்கலாம் போன்றோர் பிறந்த மண்ணில் இப்படியும் சில ஆட்டுமூளைகள்

No comments:

Post a Comment