Monday, July 11, 2016

இவ்வளவு தூரம் கவனிக்கபடுவோம் என கனவிலும் கொஞ்சமும் நினைக்கவில்லை




அங்கிள் சைமனின் அட்டகாசம் எல்லை மீறி போகத்தான் சில விஷயங்களை பகிர ஆரம்பித்தோம்.

உலக நடப்புகளுக்கும், ஈழபோராட்டத்திற்கும் பெரும் சம்பந்தம் உண்டு, சோவியத் யூனியன் எனும் மாபெரும் வல்லரசு உடைந்தபின் எப்படி எல்லாம் இவ்வுலகம் பாடாய் படுகின்றது, எதிர்க்க ஆளில்லா ஒற்றை துருவ அரசியலில் சதிராட்டத்தில் ஒரு ரத்தபுள்ளிதான் ஈழபடுகொலைகள் என்பதைத்தான் சொன்னோம்,

சீமானின் பேச்சுக்களில் அளவுக்கு மீறி பொய் இருந்தது, அதனை மீறி பெரும் ஆபத்தும் இருந்தது.


மன்மோகன்சிங் நினைத்திருந்தாலே தடுக்கமுடியாத யுத்தம் 2009, அதனை நடத்தியது இந்தியாவும் அல்ல, அப்பொழுது அமைதியாக இருந்த கலைஞர் குற்றவாளியும் அல்ல (ஈழவிவகாரத்தில் மட்டும்).

யார் எம்மை கவனித்தார்களோ இல்லையோ, பெரும் முண்ணணி இணையதள பத்திரிகை கவனித்திருக்கின்றது, எமது பதிவினை அவர்களின் இதழில் பகிர்ந்திருக்கின்றார்கள்.

அதனை மறைத்து இந்தியாதான் எதிரி என மே17ல் வங்க கடலில் மெழுகு பிடித்த அன்று எழுதபட்டது அது. தமிழக பத்திரிகைகள் வெளியிடாத எமது தகவல்களை, வெளிநாட்டு தமிழக பத்திரிகை வெளியிட்டுருப்பதுதான் வியப்பு.

இவ்வளவு தூரம் கவனிக்கபடுவோம் என கனவிலும் கொஞ்சமும் நினைக்கவில்லை

எமது எழுத்தையும் மதித்து பகிர்ந்த அவர்களுக்கு நன்றி சொல்லலாம், துணையாக வரும் அனைவருக்கும் நன்றி ,

மகிழ்ச்சி , இந்த எளிய சாமான்ய எழுத்துக்களையும் அவர்கள் அங்கீகரித்ததில் ஒரு சின்ன மன நிறைவு ,

அது அவர்களின் பெருந்தன்மையாக கூட இருக்கலாம். நிச்சயம் அப்படித்தான் இருக்கமுடியும்

மே 17 | ilakkiyainfo




No comments:

Post a Comment