Tuesday, July 26, 2016

ஈழபோராட்டத்தில் மறக்கமுடியாத பெயர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்




ஈழபோராட்டத்தில் மறக்கமுடியாத பெயர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்

முதன்முதலில் ஆயுதம் தூக்கியதும் இவர்களே, நீதிமன்றத்தில் ஒரே தீவில் இரு நாடு ஏன் சாத்தியமில்லை? என உலக அரசியல் பேசியதும் இவர்களே

வெலிக்கடை சிறையில் இவர்கள் இருக்கும் போது, அதுவும் அவர்களை மீட்க அதிரடி திட்டம் டெலோவால் வகுக்ககட்டபொழுது முந்திகொண்டு ராணுவத்தினரை தாக்கி பெரும் கலவரத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் ஆட்டம்.


Stanley Rajan's photo.

கொஞ்சம் தாமதித்திருக்கலாம் அவர்கள் வெளிவந்திருப்பார்கள் எனும் சொல்லுக்கு, அவர்கள் வெளிவந்தால் என்ன நடந்திருக்கும் என்பது இன்னொரு கேள்வியாகும்

காரணம் வங்கிகொள்ளையில் தேடபட்டு இந்தியா தப்ப முயலும்போது பிடிபட்டார்கள். காட்டிகொடுக்கபட்டார்கள் என்பது உண்மை

அந்த குழுவில் பிரபாகரனும் அன்று இருந்தார், சபாரத்தினமும் இருந்தார்

சபாரத்தினம் குட்டிமணியினை சிறை உடைத்து காப்பாற்ற முடியுமா என சிந்தித்துகொண்டிருந்த பொழுது, , பிரபாகரன் முந்திகொண்டு கலவரத்தை தொடங்கியது இன்றளவும் சந்தேகமே.

அன்றைய கொதிநிலை அப்படி இருந்தது, தங்க துரை சிங்களர்களின் பெரும் குறியாக இருந்தார். இனி ஒரு சிங்களன் கொல்லபட்டாலும் கொழும்பு தமிழர் பகுதி எரியும் என இனவாதிகள் கொக்கரித்த நேரமது, வாய்ப்பினை எதிர்பார்த்தே இருந்தார்கள்.

அந்த புலிகளின் தாக்குதலில் அது பகிரங்கமாக வெடித்தே கலவரம் தொடங்கியது, கொஞ்சம் தாமதித்திருக்கலாம் என்பார்கள்.

அந்த திருநெல்வேலி தாக்குதலில் செல்லகிளி கொல்லபட்டதும் சர்ச்சையே, காரணம் சிங்கள ராணுவ வீரர்கள் திருப்பி தாக்கவே இல்லை என்பார்கள்

உச்சமாக தான் வாசித்த 18 மாவீரர் உரையிலும் குட்டிமணி, தங்கதுரை பற்றி பிரபாகரன் ஒரு வார்த்த்தை சொன்னதுமில்லை, அவர்களை பற்றி எங்கும் பேசியதாகவும் தெரியவில்லை

ஆக ஈழபோராட்டம் என்றால் பிரபாகரனும், போராளிகள் என்றால் அவருக்காக செத்தவர்களும் எனும் அளவிற்கு மாற்றாபட்டிருக்கின்றது வரலாறு, இருக்கட்டும்

ஆனால் கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை ஆற்றிய முழக்கம், சே தென் அமெரிக்காவில் முழங்கிய பேச்சுக்களுக்கு சற்றும் குறைந்ததல்ல, அவரின் அந்த இறுதி பேச்சு அவ்வளவு அர்த்தமிக்கது

மார்ட்டின் லுத்தர் கிங், பகத்சிங் போன்ற புகழ்பெற்ற முழக்கம் அது,

எங்காவது அதனை நீங்கள் கேட்கமுடியுமா? முடியாது, என்ன பேசினார் என்றாவது தெரியுமா? ஒரு சீமானிய குஞ்சுகளுக்கும், ம்ம்ம்மேஏஏஏ 17 என கத்தும் செம்மறி கூட்டத்திற்கும் தெரியாது, இவர்கள் தான் இந்தியா, கலைஞர், சோனியா என பேசிகொண்டிருப்பார்கள்

இதுதான் ஈழபோராட்டம் ! , அதனை தமிழக உணர்வாளர்கள் தாங்கி பிடிக்கும் முறை!!

இன்று அவர்களின் நினைவு நாள், அந்த மாவீரர்களை நினைத்து கொள்ளலாம்

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதிவேண்டும் என கொடிபிடிப்போர் யாரும், 1983 ஜூலை கலவரங்களுக்கு நீதிவேண்டும் என்றோ, அன்று கொல்லபட்ட 10,0000 பேருக்கு மேலான தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றோ கேட்கமாட்டார்கள்

இது ஒரு வகையான அரசியல், இதில்தான் சிங்களன் தப்பிகொண்டிருக்கின்றான். உண்மையில் சிங்கள அரசு செய்த பெரும் கொடூர இனபடுகொலை இதுதான். ஆனால் யாரும் கேட்கமாட்டார்கள்.

இதனை பற்றி எல்லாம் பேசினால் நான் துரோகி

உண்மையில் சிங்களனை தண்டிக்க விரும்பினால் இவர்களின் படுகொலையிலிருந்தே தான் தொடங்க வேண்டுமே தவிர, முடித்து வைத்த முள்ளி வாய்க்காலில் அல்ல.






 புலிவால் பிடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும், இப்படித்தான்







சிறை உடைப்பு சம்பவம் இலங்கையில் நடக்கவே இல்லையா?







ஆமாம் எத்தனையோ முறை சிங்கள படைகளை முடக்கி, சில இடங்களில் புலிகளுக்கு உதவியாக சிங்களனை தாக்கி திருப்பி அனுப்பிய அவன் முட்டாள்தான்

இந்தியா உதவியின்றி ஈழமக்கள் உரிமை பெறுவது சாத்தியமில்லை என் சொன்ன அவன் முட்டாள்தான்

அவனை போலவே இந்தியாவுடன் உறவாடிய எல்லோரும் முட்டாள்கள்தான். நீங்களும், பிரபாகரனும் சீமானும் மட்டுமே அறிவாளிகள்

ஒரு பெரும் கொலை நடக்கும் இடத்திலும் போட்டோகிரபர் சகிதம் போஸ் கொடுத்து மொத்தமாக மாட்டிய அவர்களும் பெரும் அறிவாளிகள்.








No comments:

Post a Comment