மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தாதுமணல் அரசுடமையாக்கபடும் , புதிய கொள்கைகள் வகுக்கபடும் என்றார்களே? ஏதும் செய்தி உண்டா?
மணற்பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்த மகாதேவனே புதிய புதிய தாதுமணல் கொள்கைகளை வகுத்துகொண்டிருக்கலாம்.
இதனை எல்லாம் பற்றி நாம் பேசகூடாது, வழக்கம்போல சாலை, பாலம், கட்டடம் என்பதோடு நிறுத்திகொள்ளவேண்டும்.
யாரோ இங்கு திருமுருகன் காந்தி எனும் உலக உத்தமன் காவல்படை 2012ல் இடிந்தகரையில் நடத்திய அராஜகத்தை கண்டித்து எழுதியதை பகிர்நதிருக்கின்றார்கள், காவல்படை என்பது நடனகுழுவா? அல்லது கரகாட்ட கும்பலா?
எல்லா நாட்டு ராணுவமும் அப்படித்தான் இருக்கும், அப்படி இருந்தால்தான் ராணுவம்.
ஆனால் அந்த காவல் அமைப்பு இந்திய யதார்த்தபடி சட்டத்திற்கு கட்டுபட்டது , ஆட்சியாளர்களின் அங்குசத்தில் அடங்கும் யானை அது.
ஆட்சியாளர்கள் எப்படி உருவாவார்கள்? மக்கள்தான் உருவாக்குவார்கள்
கடந்த தேர்தலில் உதயகுமார் வாங்கிய வாக்குகளிலே மக்களின் பொறுப்பு தெரிகின்றது,
அது உதயகுமாரின் தோல்வி அல்ல, மாறாக யாரையோ அமரவைத்து, வாருங்கள் எங்களை அடித்துகொல்லுங்கள் என தனக்குதானே மக்கள் வைக்கும் சூனியம்
அதனைத்தான் சாடவேண்டுமே தவிர ராணுவத்தை அல்ல. திருமுருகன் காந்திபோன்றவர்கள் இப்படி அம்பை நோவார்களே தவிர, எய்தவனை அல்ல, எய்தவனை உருவாக்கியது யார்? நாமே.
No comments:
Post a Comment