இனி கிளம்பிவிடுவார்கள் ராமதாஸ், யுவராஜ் ,வாண்டையார் வகையராக்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்து தங்களை நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
சில நாட்களில் கிளம்புவார்கள், அல்லது மிக சரியாக ரோபோ 2 வரும்பொழுது எங்களுக்கும் காட்டவேண்டும், நாங்களும் அனுமதித்தால் தான் வெளிவரவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வார்கள்
இது இப்போதைக்கு ஓயாது போல் இருக்கின்றது, சந்தடி சாக்கில் அரசு 1000 மதுகடைகளை கூடுதலாக திறந்தாலும் சத்தம் வராது
இந்த களபேரங்களில் சினிமா துறையிலிருந்து ஒரு சத்தம் அல்லது கருத்து, அட ரஞ்சித்த வளர்த்துவிட்ட வெங்கட் பிரவுவின் தரப்பிலிருந்து ஒரு ஆதரவு அல்லது எதிர்ப்பு அல்லது ஒரு வார்த்தை வந்திருக்கும்?
வராது, ஒருகாலமும் வராது, அதுதான் தமிழ் திரையுலகம்
வடிவேலு எனும் பெரும் கலைஞனே ஓட விரட்டபட்டு இன்று மூலையில் வைக்கபட்டபின்பு, ரஞ்சித் எல்லாம் எம்மாத்திரம்?
எங்கோ, எதிலோ பெரும் அரசியல் ஒளிந்து கிடக்கின்றது, சிக்கி இருப்பவர் ரஜினி என்பது மட்டும் புரிகின்றது.
இம்மாதிரியான சர்ச்சைகளில் கமலஹாசனுக்கு பெரும் அனுபவம் இருக்கின்றது, இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவர் அனாசயமாக தாண்டுவார், அவர் கெத்து அப்படி
ரஜினி அதில் ஹிஹிஹிஹிஹிஹி........
No comments:
Post a Comment