Wednesday, July 6, 2016

தேசத்தின் விதி அப்படி.

கல்வி அமைச்சர் பதவியிலிருந்து ஸ்ருமிதி இராணி மாற்றபட்டார், ஜவுளிதுறைக்கு நியமிக்கபட்டார்

# கல்விகொள்கைகளை குழப்பமாக மாற்றிகொண்டிருந்தார்கள், இப்பொழுது கல்வி அமைச்சரையே மாற்றிவிட்டார்கள்,

‪#‎கல்விக்கு‬ மதசாயம் பூசியவர் என்ற சர்ச்சை உண்டு, இப்போது ஜவுளிதுறை அமைச்சராம் என்ன சாயம் பூசுவார் என்பதிலே பகீர் என்கிறது, இனி இந்தியர் எல்லோரும் காவி உடைதான் அணியவேண்டும் என யூனிபார்ம் கொண்டுவந்துவிட்டால் என்ன ஆவது?


# ஐரோப்பா, அமெரிக்காவிற்கு அந்நியமுதலீடுகளை கவர பறக்கிறேன் என்பார் மோடி, ஒரு அர்த்தம் இருக்கலாம். ஆனால் ஆப்ரிக்காவில் இருந்து என்ன அந்நிய முதலீடு? யானைகளும், ஒட்டகசிவிங்கிகளும் வந்து முதலீடு செய்யுமோ?

>>இது இந்திய தொழிலதிபர்கள் ஆப்ரிக்க சந்தைகளை வளைக்கும் முயற்சி, இதற்கு இந்த நாட்டின் பிரதமரே செல்லவேண்டுமாம், தேசத்தின் விதி அப்படி.

No comments:

Post a Comment