தமிழ் திரையுலகின் மிக சிறந்தபடங்களில் ஒன்று அறுவடை நாள், யதார்த்தமான வில்லன், அழகான நெல்லை வயல்கள், மனதை கதைக்குள் கொண்டுவரும் இளையராஜாவின் மாய இசை என சகலமும் கலந்த அற்புதமான படம் அது.
நாயகி பல்லவிக்கு அன்றே 40 வயது இருப்பதற்கான உடல்வாக்கு எனினும் முகத்தில் தெரியவில்லை, அவரும் அழகாகத்தான் தெரிந்தார், வடிவுக்கரசி நடிப்புக்கும் அரசி.
கதை என்ன? ஒரு கொடூர பண்ணையார், அவருக்கு வெள்ளந்தியான மகன். ஆனால் பண்ணையார் தன் கண்ணசைவில் மகனை ஆட்டிவைப்பவர், மகன் சொந்தமாக ஒரு பருக்கை கூட உண்ணமுடியாது. இதில் ஒரு சீரியசான பெண்ணின் காதல் புகுந்து எல்லாம் சோகம், சாவு, அழுகை. உருக்கமான படம்.
இந்த உருக்கமான கதையினை வேறுமாதிரி சொன்னால், அதாவது கதையினை அப்படியே வைத்து கேரக்டர்களின் குணத்தை மட்டும் மாற்றினால்,
பண்ணையாரை பொறுப்புள்ள அப்பாவாக மாற்றி, ஹீரோயினை அறுவடை நாள் ஹீரோ போல வெள்ளந்தியாக மாற்றி, எல்லோரையும் நல்லவர்களாக காட்டினால் பாசம், சிரிப்பு, காமெடி வகையறா
சந்தோஷ் சுப்பிரமணியம் படம் ரெடி.
இப்படி கதைக்குள் கதை உருவி காவியம் படைக்கின்றது, தமிழ் கூறும் நல்லுலகம்.
No comments:
Post a Comment