Monday, July 11, 2016

காஷ்மீரில் நடப்பது என்ன?





காஷ்மீரில் கடும் கொடும் ராணுவ அட்டகாசம் நடப்பது போலவும், அம்மக்களை வாழவிடாமல் வதைப்பது போலவும், இந்திய ராணுவம் கொடுமையின் உச்சம் எனவும் சிலபேர் எழுதிகொண்டிருக்கின்றார்கள்.

கொஞ்சம் சிந்திக்கவேண்டும், பாகிஸ்தான் கூட்டாளி ஹூரியத் தலைவர்கள் முதல் அங்கிள் சைமனின் கூட்டாளியான யாசின் மாலிக் வரை எத்தனையோ பேர் அங்கு உண்டு, அவர்களை எல்லாம் விட்டுவைத்த ராணுவம் புர்கானை மட்டும் கொன்றது ஏன்?

kashmir-clashes-afp_650x400_41468212123

புர்கான் எனும் தீவிரவாதி சுட்டுகொல்லபட்டதிற்கு 100 பக்கத்திற்கு பொளந்துகட்டும் ஊடகங்கள், அங்கே எல்லையில் கொத்துகொத்தாக உயிரழக்கும் இந்திய வீரர்களை பற்றி, காயமடைந்து அங்கம் இழந்த அவர்களை பற்றி எல்லாம் ஒரு வார்த்தை கூட எழுதாதது, அல்லது பெட்டி செய்தியோடு விட்டுவிடும்.


அப்படி கடும் ராணுவ நெருக்கடி என்றால், அம்மக்கள் அங்கே வசிக்கமுடியுமா? கிளம்பிவிட மாட்டார்களா?. அப்படி எத்தனை லட்சம் பேர் பாகிஸ்தான், நேபாளம், சீனா,ஆப்கன் என கிளம்பி இருப்பார்கள்? ஒருவரை காட்டுங்கள்?

காரணம் அந்த நாடுகளைவிட இங்கே நன்றாகத்தான் வாழ்கிறோம், என்ற எண்ணம்தானே காரணம், அட அடுத்த நாடு வேண்டாம், மற்ற மாநிலங்களுக்காவது அகதியாக சென்றிருக்க்வேண்டுமல்லவா? செல்லவில்லையே ஏன்?

அவர்களை நன்றாகத்தான் இந்நாடு வாழவைத்துகொண்டிருகின்றது, சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால் சில பிரச்சினைகள் வரலாமே தவிர, வாழ விடாத இந்திய கட்டுப்பாடு எல்லாம் அங்கே இல்லை, அதுதான் யதார்த்தம்.

உயிர்வாழ முடியவில்லை அல்லது இந்நாடு பிடிக்கவில்லை என்றால் என்றோ கிளம்பி இருப்பார்கள், ஏன் செல்லவில்லை? அவர்களுக்கு இங்கே வாழமுடிகின்றது, அப்படி பெரும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கருதவில்லை.

# இந்த புர்கானை பிடித்துகொண்டு இங்கே சில தமிழ்தேசிய வாதிகள் இந்திய ராணுவம் மிக பயங்கரமானது , காஷ்மீரில் இந்தியா அட்டகாசம், ஈழத்தில் இப்படித்தான் அழித்தனர் என ஒப்பாரி வைக்கின்றார்கள், இவர்களின் கேடு கெட்ட ஆசை என்ன? இங்கும் ரத்த ஆறு ஓடவேண்டும், அதில் நீந்தி இவர்கள் கரையேரவேண்டும் என்பதனை தவிர ஒன்றும் இருக்கமுடியாது.







No comments:

Post a Comment