Friday, July 21, 2017

"ஓவியா வாழ்க.." என சொல்லாவிட்டால் வெளியேறு...




Image may contain: 1 person, smiling, sitting and indoorபாகம் பிரியாளும் ஓவியா ரசிகையாகிவிட்டார், அதுவும் அதி தீவிர ரசிகை, ஓவியா அழுததால் கிட்டதட்ட பத்ரகாளி கோலத்தில் இருக்கின்றார், அந்த காயதிரியோ ஜூலியோ இந்த வீட்டு பக்கம் வந்தால் கொலைதான், அதுவும் பலமுறை கொல்வார் போல‌..


சுப்பிரமணியபுரம் கிளைமாக்ஸ் காட்சி போல படுகொலை நடத்த கிளம்பிவிடுவாரோ என பேரச்சமாக இருக்கின்றது, அது கூட சிக்கல் இல்லை, அடுத்து வருவதுதான் சிக்கல்


நானும் ஓவியாவினை ஆதரித்து வாக்களிக்காவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது என மிரட்டல்





ஒரு அதிதீவிர ஏக குஷ்பூ ரசிகன் ஓவியாவினை ஆதரிப்பது என்பது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம், அதற்கு பதிலாக சயனைடு கடிக்கலாம். ஓவியாவினை எல்லாம் நாம் ஆதரித்தால் குஷ்பூவிற்கு என்ன மரியாதை?? சங்கத்திற்கு என்ன மரியாதை? முடியாது என சொல்லியாயிற்று

ஆனாலும் இது அவர் இல்லாத பட்டியல் அதனால் நீ ஓவியாவினை ஆதரிக்கலாம் என்றெல்லாம் மூளையினை சலவை செய்யும் விஷயம் வேகமாக நடந்தது, முடியவில்லை

மூளை இல்லாத இவனை எப்படி மூளை சலவை செய்வது என பாகம்பிரியாளுக்கு தாமதமாக புரிந்திருக்கின்றது, அதனால் நீ குஷ்பூ ரசிகனாகவே இருந்து தொலை, ஆனால் ஓவியாவிற்கு வாக்களித்துவிடு என சாம, பேத தான, தண்ட முறையில் ஆதரவு கோருகின்றார்

எல்லா முறையும் தோல்வியுற்று இப்பொழுது தண்ட கட்டம் வந்திருக்கின்றது

"நீ ஓவியாவினை குஷ்பூவின் விசிறி என சொல்ல சொல், அதன் பின் எங்களுக்கு தயக்கம் இல்லை.." என சொன்னாலும் பிரச்சினை தீரவில்லை,

"ஓவியா வாழ்க.." என சொல்லாவிட்டால் வெளியேறு என மகாத்மா காந்தி பாணியில் மிரட்டல் வருகின்றது, அது விரைவில் ஹிட்லர் பாணியாக மாறும் போல் தெரிகின்றது

"நானும் கோடி பொருள் கொடுத்தாலும் கோமகளை மறவேன்..." என சொல்லிகொண்டேதான் இருக்கின்றேன்

விரைவில் தசவதாரம் கமல் போல என்னை தூக்கி கடலில் போடும் திட்டத்தில் பாகம்பிரியாள் இறங்கியிருப்பது போல் தெரிகின்றது,

இந்த ஓவியா இன்னும் எத்தனை குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க போகின்றாரோ தெரியவில்லை





 


 

No comments:

Post a Comment