தமிழ்நாட்டு அரசியலை பலப்படுத்த கமல்ஹாசன் அவசியம் இல்லை: தமிழிசை
ஆமாம் அதற்கு அம்மணி அரசியலை விட்டு போனாலே போதும்.
ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு
சல்யூட் மேடம், தமிழ்நாட்டு கவர்ணர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க வாருங்கள், மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்
கமலஹாசனுக்கு ஆதரவாக குஷ்பூ இன்னும் ஏன் கருத்து சொல்லவில்லை என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.
மாநில முதல்வரே கமலஹாசன் கோதாவில் குதித்து தன் சகாக்களுடன் குத்துசண்டைக்கு வந்துவிட்ட பின்னும் குஷ்பூ ஏன் அமைதியாயிருக்கின்றார் என பல கேள்விகள்.
நிலவரத்தை மிக உன்னிப்பாக கவனித்துகொண்டிருக்கின்றார் எம் தலைவி, பேசவேண்டிய நேரத்தில் மிக சரியாக பேசுவார்.
அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சி தன் நிலைப்பாட்டினை இன்னும் தெரிவிக்காததால் தலைவி அமைதியாக இருப்பதாக சர்வதேச ஊடகங்ள் தெரிவிக்கின்றன.
திருநாவுக்கரசர் எனும் பாஜக, அதிமுக உளவாளி இங்கு இருக்கும்வரை தமிழக காங்கிரஸ் இப்படி உம்மென்றுதான் இருக்கும்,
ஆனால் குஷ்பூவின் இந்த அமைதி புயலுக்கு முந்தைய அமைதி. இந்த அமைதி நீடிக்குமானால் அந்த புயல் வீசும்பொழுது திருநாவுக்கரசர் நாற்காலியும் இருக்காது, சத்யமூர்த்தி பவனும் இருக்காது
காங்கிரஸின் இந்த அமைதி அதிமுகவிற்கு ஆதரவு, கமலஹாசனுக்கு எதிர்ப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்
விரைவில் பேசுவார் குஷ்பூ
கமல்ஹாசன் விவகாரமே இப்படி என்றால், குஷ்பூ பேச ஆரம்பித்தால் மோடி வரை அலறுவார், அது தமிழக காட்சிகளையே மாற்றும்
கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” தமிழிசை
ஏம்மா, அது தேசிய மொழி அதனால் எல்லோரும் கற்கவேண்டும் என சொல்வதும் நீங்கள்தான், இந்திமொழியில் அவர் ஏன் நடித்தார் என கேட்பதும் நீங்கள்தான்.
ஒரு தேசிய கட்சியின் தலைவி இப்படி பிரிவினை பேசுவது சரியே அல்ல, அம்மணி இப்படி வழக்கமாக பேசமாட்டார், மாறாக என்னமோ ஆகிவிட்டது,
அம்மணி முன்பு லூசு போல பேசிகொண்டிருந்தது இப்பொழுது லூசாகவே மாறிவிட்டது
எச்.ராசாவிடம் பேசிகொண்டிருந்திருப்பாரோ?
"என்னம்மா ஆச்சு உங்களுக்கு?"
No comments:
Post a Comment