Devi Somasundaram முகநூல் ஐ.டி முடக்கபட்டதாம், பின் மீட்டுவிட்டாராம்.
முகநூலில் அவருக்கு எதிரிகள் எப்பொழுதும் அதிகம், இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் முடக்குகின்றார்கள்?
சும்மா சொல்ல கூடாது, ஒரு நாளைக்கு 10 எதிரிகளை உருவாக்கியே தீருவேன் என பதிவிட்டுவரும் அம்மணி கொஞ்சம் வித்தியாசமானவர்தான்
அதாகபட்டது அம்மணி கொஞ்சநாட்களாக முகநூலில் மகளிர் விழிப்புணர்வு பதிவு இட்டுகொண்டிருந்ததார்,
முகநூலில் பெண்கள் எப்படி இருக்கவேண்டும்? எப்படி எல்லாம் சுதாரிப்பாக தன்னை காத்துகொள்ளவேண்டும்?
யாரையெல்லாம் துண்டிக்க வேண்டும், ஆண்களிடம் எப்படி எல்லாம் கவனமாக இருக்கவேண்டும்
என வகுப்பெடுத்து கொண்டிருந்தார்.
நல்ல விஷயம் தான், ஆனால் எல்லோருக்கும் அது நல்ல விஷயம் ஆகுமா?
தவளையினை பாதுகாப்பாக இரு என்றால் பாம்பிற்கு பொறுக்குமா?
தோழியால் ஞானம் பெற்ற ஏதோ பட்சி, எவனிடமிருந்தோ எஸ்கேப் ஆகியிருக்கலாம்.
அவன் கோபத்தில் அம்மணி கணக்கினையே மூடிவிட்டிருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது.
No comments:
Post a Comment