Sunday, July 30, 2017

பிக்பாஸை மூடு...

உண்மையிலே போர்குணம் மிக்கவர்கள் திமுகவினர், பேச்சிலும் எழுத்திலும் , களத்திலும் அவர்களிடம் வீரம் தெறிக்கும். அது வரலாறு


மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு உண்டு, எனினும் கலைஞர் என்ற ஒற்றை மனிதனுக்காக கட்டுபட்டு நின்றார்கள், அவர் கண்ணசைத்திருந்தால் இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் என்றோ தூக்கி கொண்டுபோய் கதற, கதற கலைஞர் வாழ்க என சொல்ல வைத்திருப்பார்கள்


ஆனால் தலமைக்கும், தலைவருக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பில்தான் தமிழகம் அமைதியாக இருக்கின்றது




இப்பொழுது ஏன் இதனை சொல்கின்றோம் என்றால் காரணம் உண்டு


அதாகபட்டது இந்த ஓவியாவிற்கு சில பேரவைகள் தொடங்கபட்டிருக்கின்றதாம், அதில் சிலர் ஓவராக பேசுகின்றார்கள்


எப்படியென்றால் நாங்கள் குஷ்பூவிற்கு கோவில் கட்டியது போலவோ, நயனுக்கு சிலை வைத்தது போல மொக்கை ரசிகர்கள் அல்ல என்ற அளவு பேசியிருக்கினார்


டேய் ரேஸ்கல்... ஓவியா உன் தலைவி என்றால் இருக்கட்டும், அவரை நீர் வணங்கட்டும், அது உன் விருப்பம்


ஆனால் குஷ்பூ ரசிகர்களை பற்றி உங்களுககெல்லாம் என்ன தெரியும், அதுவும் அந்த ஒட்டடை குச்சி ஓவியாவினை ரசிக்க ஆரம்பித்த பின் உங்களை என்ன சொல்ல? உங்கள் ரசனை அப்படித்தான்.


நாங்கள் களமிறங்கினால் தமிழகம் தாங்காது. இந்தியா இயங்காது


ஒழுங்காக பிக்பாஸ் பார்தோமா, கை தட்டினோமா என இருந்தால் சிக்கல் இல்லை, மாறாக எங்களை சீண்டினால் நடப்பதே வேறு


ஒவியா அல்ல, அந்த பிக்பாஸையே நாமினேஷன் செய்தோ, செய்யாமலோ நாமினேட் செய்துவிடுவோம் ஜாக்கிரதை


4 படம் நடிக்கமுடியாத அவருக்கே நீங்கள் கிளம்பினால், 30 வருடம் வெற்றிகொடி நாட்டிய தங்க தாரகைக்கு எப்படி பட்ட படை இருக்கும்?


தலைவி அமைதியாக இருப்பதால் நாங்களும் அமைதியாக இருக்கின்றோம் , ஆனாலும் ஓரளவுக்குத்தான் அமைதி காக்க முடியும்.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வீணாக ரசிகர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி, ரத்த களறியியினை தூண்டும் அளவுக்கு செல்வதால் தமிழக அரசு மிக அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டியது நல்லது


பிக்பாஸை மூடு...



No comments:

Post a Comment