மறுமலர்ச்சி படம் ஓடி கொண்டிருக்கின்றது
மம்முட்டி, தேவயாணி என எல்லோரும் நடித்திருக்கின்றார்கள், ஒரு முகம் , மிக அற்புதமாக நடிக்கின்றது. குரல்தான் ஒட்டவில்லையே தவிர முகம் மிக மிக பழகிய முகம், ரசித்த முகம்
அது கலாபவன் மணி, அவரேத்தான். அதனை தாண்டி செல்லமுடியவில்லை
எப்படிபட்ட நடிகன்? முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருக்கின்றான்
முன்பெல்லாம் இப்படத்தினை பார்த்தால் மம்முட்டியும், மனோரமாவும் தான் கண்முன் நிற்பார்கள், பலமுறை பார்த்திருக்கின்றேன்
இப்பொழுது பார்க்கும்பொழுது கலாபவன் மணியினை தவிர யாரும் கண்முன் நிற்கவில்லை, அவர் இறந்த காட்சிக்கு பின் படத்தை தொடர முடியவில்லை.
வேலுவாக இப்படத்தில் வந்த மணி, பின்னாளில் சூர்யாவின் வேலு படத்தில் வில்லனாக அமர்க்களம் செய்ததெல்லாம் காலம் கொடுத்த வாய்ப்பு.
மிக சிறந்த நடிகர்கள் எல்லாம் அல்பாயிசில் மறைவதும், சாக வேண்டியவர்கள் நீண்ட காலம் இருந்து சினிமாவினையும், அரசியலையும் கெடுப்பது இங்கு சாபக்கேடு
இன்னொரு முறை பிறந்து வந்துவிடுங்கள் மணி...
No comments:
Post a Comment