Tuesday, July 25, 2017

பிக்பாஸ்காரன் வீட்டினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ....







Image may contain: 1 person, smiling, close-upகாலையிலே ஒரு போன், அதில் கேட்டவர் இப்படித்தான் கேட்டார்

"அண்ணே, கலைஞர் பற்றி ஒன்று கேட்கணும்னே

என்னய்யா?


கலைஞருக்கு ஒரு பாட்டு உண்டே, திமுக மேடைகளில் எல்லாம் போடுவாங்களே என்னண்ணே?

நிறைய பாட்டு உண்டு எது?

ஏதோ பாம்பு பல்லின்னு வரும்ல அண்ணே?

ஆமா,

"பாளையங்கோட்டை சிறையினிலே,


பாம்புகள் பல்லிகள் நடுவினிலே,


அஞ்சாமல் இருந்தது யாரு,


கலைஞர் பெயரை கூறு"


அதேதாண்ணே அதேதான், தேங்க்ஸ்ணே

சரி இப்பொ இந்தபாட்டு எதுக்கு?

அண்ணே, அதே பாடலை, 

"பிக்பாஸ்காரன் வீட்டினிலே, 


பாம்புகள் பல்லிகள் நடுவினிலே,


அஞ்சாமல் இருந்தது யாரு, 


தலைவி ஓவியா பெயரை கூறு.."


images.jpgஇப்படி மாத்தி பாடி ஆல்பம் வெளியிடபோறோம்ணேஇந்த பாட்டை படிச்சது யாருண்ணேண்?

நாகூர் ஹனிபா பாடினார், நீங்க இப்படி வருவீங்கண்ணு தெரிஞ்சி செத்துட்டார்

அப்படியாண்ணேன் அப்போ இருக்கிறதுல யாரையாவது வச்சி பாடி ரெக்கார்டு பண்ணிரலாம்ணே

ஏண்டா ஏன்?

விட கூடாதுண்ணே, ஓவியா அழுதிருச்சிண்ணேன், இந்த பாட்டை ஆல்பமாக்கி பெரிய ஆதரவ திரட்டபோறோம்ணேண், பச்ச மண்ணுண்ணே அவா, காப்பாத்தணும்ணே, நன்றிண்ணே"

(இப்படி இரவெல்லாம் சிந்தித்து கேட்டது யார் தெரியுமா? நண்பர் Omm Prakash

பொருளாதாரத்தில் ஆராய்ச்சி படிப்பினை செய்யும் நண்பர் Omm Prakash மன்மோகன் சிங் போல வருவார் என நினைத்துகொண்டால் , அவரோ மைக்மோகன் லெவலுக்கு சென்றுகொண்டிருக்கின்றார்)

எல்லாம் ஓவியா மாயம்... 






 


 

No comments:

Post a Comment