அந்த காலத்திலே அந்த ராமசந்திரனுக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கின்றது, சிவாஜிகணேசன் பராசக்தியில் பைத்தியகாரனாக நடித்தது போல தானும் நடித்தாலென்ன எனும் அபாய ஆசை 1960களில் இவருக்கும் வந்திருக்கின்றது, "கொடுத்து வைத்தவள்" படத்தில் நடித்தும் விட்டார்
அதற்கு எதற்கு அய்யா நடிக்க வேண்டும், நடிக்காமல் கேமரா முன் நின்றால் முடிந்தது விஷயம் என யாராவது சொல்லியிருக்கலாம்
சகிக்கவில்லை, ரவீந்திர ஜடஜா லாராவின் ஆட்டத்திற்கு ஆசைபட்டது போலவும், அஸ்வின் மாலகம் மார்ஷல் இடத்திற்கு ஆசைபட்டு விளையாடியது போலவும் இருக்கின்றது.
சீமான் ஜிஎஸ்டியினை விளக்கியதை விட பெரும் கொடுமையாய் இருக்கின்றது, சிவாஜி கணேசன் எவ்வளவு பெரும் நடிகன் என்பதை இந்த ராமசந்திரன் படம் நன்றாகவே விளக்குகின்றது.
ராமசந்திரனின் இந்த நடிப்பை விட சிம்புவின் அ..அ..அ எவ்வளவோ பரவாயில்லை
அந்த நடிகை, ஈ.வி சரோஜாவினை பாராட்டியே தீரவேண்டும், 1 நிமிடம் பார்ப்பதற்கும் நம்மால் தாங்க முடியாமல் ரிமோட் எங்கே? பரவாயில்லை டிவியினை உடை என கத்த தோன்றும்பொழுது அந்த அம்மணி எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கின்றார்.
"சகிப்புதன்மைக்கான காந்தி விருது" அவருக்கு வழங்கபடாமல் போனது இந்நாட்டின் நடந்த பெரும் அநீதிகளில் ஒன்று
ஆனாலும் ஒரு பாடல்வரி ஆறுதல், அற்புதமான வரி. அந்த பைத்தியகார ராமசந்திரனை கண்டு நாயகி பாடுகின்றாள்
"அழகாய் உன்னை படைத்த இறைவன்
அறிவில் மட்டும் குறை வைத்துவிட்டான்"
மெரீனாவின் அந்த இரட்டை கல்லறை வாசலில் பதிக்க வேண்டிய வரிகள்..
No comments:
Post a Comment