ராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார் என இலங்கை ஊடகம் சொல்கின்றது. இவ்வளவுதான் விஷயம்
இதனை சீமான் எப்படி சொல்வார் தெரியுமா?
"இது என்ன தெரியுமா என் சொந்தங்களே, தமிழரை அழிக்கும் பொழுது ,தன் கையால் தான் தமிழரை கொல்வேன் என கொடூரமாக சொன்ன ராஜபக்சே, பெரும் பீரங்கியினை சுமக்க தன் உடலை தயார் செய்தபொழுது எடுத்தபடம்.
அந்த பீரங்கியால சுட்டா ஒரு சுடுல 100 தமிழன் சாவான், பெரிய பீரங்கி , நான் அண்ணன சந்திக்கும் பொழுது போராளிகள் தள்ளி இருந்து காட்டி தந்தாங்க, சிங்களன் ஏரியாவில இருந்திச்சு. இந்தியா குடுத்தது, தமிழன் வரிப்பணத்தில் கொடுத்தது என் உறவே
இப்படி தமிழரை கொல்ல ராஜபக்சே உடலை தயார் செய்யும் பொழுது ஏன் கலைஞர் தடுக்கலை, சோனியா தடுக்கல.. ஏன் தடுக்கல. ..அவனை உடற்பயிற்சி செய்ய சொன்னதே காங்கிரசும் திமுகவும் தான.
டேய் ராஜபக்சே, தமிழரை அழிக்க
உடற்பயிற்சி செய்யாதே என சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா?
சொல்லலியே, சொல்லிலிருந்தா தமிழன் அழிஞ்சிருப்பானா? நாதியில்லையே, சொல்ல ஒரு நாதியில்லையே
டேய் ராஜபக்சே ராமேஸ்வரம் வாரியா, நீனா நானான்னு பாத்துருவோம்"
"பயிற்சி பற்றி எனக்கு புதிதாக எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை" : கோஹ்லி
இந்த ஆணவம் நிச்சயம் இவரை அழிக்கும், இவர் பெரும் வீழ்ச்சியினை விரைவில் சந்திப்பார்.
அழிவுக்கு தயாராகின்றார் கோஹ்லி, அவ்வளவுதான் சொல்ல முடியும்.
No comments:
Post a Comment