Thursday, July 27, 2017

என் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு

என் அடுத்தபடம் பற்றி யாரும் பேசவேண்டாம் : சிம்பு கண்டிப்பு


அதாவது என்ற படம் வந்து சிம்புவின் வாழ்வினை புரட்டிபோட்டு அடித்தே விட்டது, அன்னார் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவில் முன்பு இருந்தார், ஆனால் முதல்பாகத்தின் ரிசல்ட், இரண்டாம் பாகம் வந்தால் சிம்பு உயிருக்கு ஆபத்து என்ற அளவில் இருந்ததால் விட்டுவிட்டார்


இதன் பின் பெரிய சிம்புவான தன் தந்தையின் தயாரிப்பில் நடிப்பதாக இருந்தது, என்னதான் தந்தை என்றாலும் சிம்புவினை வைத்து ரிஸ்க் எடுக்க அவரும் தயாரில்லை, படத்தின் தலைப்பு "கெட்டவன்" என சிம்புவே கிளப்பிவிட்டார்




அப்படி படம் வந்தால் தான் "மகனால் கெட்டவன்" என்ற நிலைக்கு வந்துவிடுவோம் என அஞ்சிய டி.ஆர் நகர்ந்தே விட்டார்


இப்பொழுது சிம்புக்கு கடும் கோபம், நான் சொல்லும் வரை அடுத்தபடம் பற்றி ரசிகர்கள் பேசகூடாது என சொல்லிவிட்டார், அடுத்த தயாரிப்பாளர் கிடைத்தபின் சிம்புவே சொல்வாராம்?


அடுத்த தயாரிப்பாளரா? அப்படி ஒருவர் கிடைப்பாரா?


அருணாச்சலம் ரஜினி போல யாராவது சினிமா எடுக்க வந்தாலொழிய இனி சிம்புவிற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை



No comments:

Post a Comment