Monday, July 31, 2017

நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்



Image may contain: 1 person, smiling, glasses and close-upபிரபாகரன் போலவே நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்


இவர் தாடியினை இழுத்து வைத்து கேட்கலாம், அந்த பிரபாகரன் இந்தியாவினை நேசித்திருந்தால் 1500 இந்திய வீரை கொன்றிருப்பானா? ராஜிவ் காந்தியினை கொன்று ஈழதமிழரை இந்தியாவில் இருந்து பிரித்திருப்பானா?


2009லும் இந்தியா கொடுத்த அமைதி ஒப்பந்தத்தை கிழித்து எறிந்திருப்பானா?


கடைசிவரை தான் செய்தது தவறு என சொன்னனா? மாறாக அவன் நேசகரம் நீட்டுவானாம் இந்தியா ஓடி சென்று அணைக்கவேண்டுமாம்


அன்னார் பாஜகவிடம் அணுக்கமாக இருப்பாராம், காங்கிரஸ் அரசு துரோகம் செய்ததால் அவர் அவர்களோடு பேசவில்லையாம், ஆனால் பிஜேபி நல்ல கட்சியாம்


சரி எங்கே அந்த நல்ல கட்சி தனி ஈழம் அமைத்து கொடுத்துவிடட்டும் பார்க்கலாம், அட அந்த 13ம் சட்டதிருத்ததை செய்யட்டும் பார்க்கலாம்,


அவ்வளவு ஏன் போர்குற்றத்தில் ராஜபக்சேவினை தண்டிக்கட்டும் பார்க்கலாம்?


குறைந்தபட்சம் ராஜிவ் கொலையாளிகளையாவது விடுவிகட்டும் பார்க்கலாம்? செய்யுமா? செய்யாது


இந்தியாவின் நிலைப்பாடு இப்படி இருக்க, அன்னார் என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார்


இலங்கையினை சீனா விழுங்கிவிடுமாம்


அன்று அமெரிக்கா விழுங்கிவிடும் என சொல்லி உங்களை வளர்த்துவிட்டு பட்டபாடு போதாதா? இனி சீனாவினை சொல்லி பயமுறுத்துவீர்களா?


வரட்டும் அடிக்கட்டும், ஏற்கனவே ஈழபுலிகளால் 1500 ராணுவத்தாரை இழந்த தேசம்தான் இது, அதனை விட சீனன் ஒன்றும் கிழித்துவிடமாட்டான், எம் கடற்படை சும்மா விடாது


ஆமாம், நான் காங்கிரசை எதிர்ப்பேன் , ஆனால் ஒன்றுமே செய்யாத பாஜகவினை இந்து எனும் பெயரில் ஆதரிப்பேன் என சொல்லிவிட்டு செல்லும் ஐயா


காங்கிரசாவது ஈழமக்களுக்காக சில சவால்களை எடுத்து கையினை சுட்டது, இந்த பிஜேபி செய்தது என்ன ஒன்றுமே இல்லை


இதனை சொன்னால், ஆம் பிஜேபி ஒன்றுமே செய்யவில்லை என்பதால்தான் கைகோர்க்கின்றேன் என்கின்றார் காசி ஆனந்தம்


ஏதாவது புரிகின்றதா? புரியாது. இதுதான் இவர் தொடங்கியிருக்கும் இந்திய ஈழ நட்புறவு மையத்தின் கொள்கை


அய்யா, இந்த மையத்தை பிரபாகரன் இருக்கும்பொழுது நீவீர் ஏனய்யா தொடங்கவில்லை?


உண்மையினை சொல்லுங்கள், அமைதிபடையினை விலக்கியது கலைஞர் என சொல்லுங்கள், பல இடங்களில் புலிகளுக்கு உதவியது கலைஞர் என்ற உண்மையினை சொல்லுங்கள், இறுதியில் பிரபாகரன் செய்தது தவறு என சொல்லுங்கள்


அப்படி உண்மையினை சொன்னால் நீர் திமுக மேடையில்தான் இருப்பீர், அந்த காசி ஆனந்தனை வரவேற்போம்


ஆனால் கலைஞர் செய்த உதவிகளை மறந்து, காங்கிரஸ் உங்களுக்கும் பிரபாகரனுக்கும் செய்த உதவிகளை எல்லாம் மறந்து, பிஜேபி மேடையில் இருப்பதை கூட பொறுப்போம், காரணம் நன்றி என்பது உங்கள் கும்பலுக்கு சுட்டுபோட்டாலும் வராது.


ஆனால் எங்காவது நான் பிராபகரன் போல இந்தியாவினை.... என நீர் தொடங்கினால் சும்மா விடுவதாக இல்லை


இவரை விமர்சிப்பவர்கள் சிங்கள அரசின் கைகூலிகள் என்கின்றார்


மிஸ்டர் காவி ஆனந்தம், உங்களை விமர்சிக்க சிங்களன் ஏன்? ஒவ்வொரு இந்தியனும் , அந்த உணர்வுள்ள ஒவ்வொருவனும் புலியினையும் உங்களையும் எதிர்ப்பான்


உங்களை ஆதரித்துதான் எங்கள் தமிழுணர்வை காட்டவேண்டிய அவசியமில்லை


இதுகாறும் இல்லாமல் இப்பொழுது திடீரென இந்திய அரசோடு நீங்கள் குலவுவதை பார்த்தால், புலி பத்மநாபன் சிங்கள அரசோடு இருப்பது போல, கருணா இருப்பது போல நீரும் ரகசிய சிங்கள ஏஜண்ட் எனும் சந்தேகம் இந்தியருக்குத்தான் ஏற்படுகின்றது


எமது நாட்டில் இருந்துகொண்டு, எங்கள் நாட்டு உணர்வினை பேசும்பொழுது நீ சிங்கள கைகூலி என இந்தியர்களை சொல்ல உமக்கு எவ்வளவு தைரியம் அய்யா?


இதனை நீர் லங்காபுரியில் இருந்து சொல்லவேண்டும், எம் நாட்டுக்குள் வந்து எம்மை நோக்கி சொல்லகூடாது புரிகின்றதா?


உணர்ச்சியுள்ளவர் என்றால் திமுக புலிகளுக்கு செய்த எல்லா உதவிகளும் நினைவிற்கு இருந்திருக்கவேண்டும், அதுதான் உணர்ச்சி


இப்படி பச்சை சந்தர்பவாதம் என்பது உணர்ச்சி அல்ல?


இதற்கு மேலும் பேசினால், நீர் உணர்ச்சி கவிஞர் அல்ல, உணர்ச்சியற்ற .......................


இவரது பேட்டியினை செய்தியாக்கிய அந்த ஆனந்த விகடன் ஒரு தேசதுரோக பத்திரிகை, நாளை பாகிஸ்தான் தீவிரவாதி , மாவோயிஸ்டுகளையும் இதே போல செய்தியாக்குவார்கள்


ஆனந்த விகடனின் தேசதுரோகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்


இந்த அரசு மாணவர்களை நக்சலைட்டுகள் என கைது செய்கின்றது, பேராசிரியரை நாட்டுக்கு ஆபத்தானவர் என கைது செய்கின்றது


ஆனால் இந்த அந்நியநாட்டு ஆபத்தான பிரிவினை கும்பலகளை மட்டும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்றது


தமிழக அரசும், இந்திய அரசும் திருந்தினால் விகடன் தானாக திருந்தும்













 


 

No comments:

Post a Comment