Tuesday, July 25, 2017

தெலுங்கு திரையுலகம் அரண்டு கிடக்கின்றது

images.jpg


தெலுங்கு திரையுலகம் அரண்டு கிடக்கின்றது, பெரும் போதை மருந்து கும்பலுடன் முண்ணணி நடிகர்/ நடிகைகளுக்கு தொடர்பு என விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன‌


இதுவரை சார்மி, தருண், முமைத்கான், காஜல் அகர்வாலின் மேனேஜர் என இருபது பேர்வரை சிக்கியிருக்கின்றார்கள், ஆந்திர அரசு தலையிட மறுக்கின்றது, காவல்துறை இரும்புபிடிபோட்டு உலுக்குகின்றது


ஆப்ரிக்க போதைமருந்து கும்பல் எந்த அளவு ஊடுருவிருக்கின்றது, பெரும் ஆபத்தான போதை பழக்கம் எந்த அளவு எளிதான காரியமாயிருக்கிறது என ஆந்திரம் முழுக்க பரபரப்பு.




விசாரணை தீவிரமாக நடக்கின்றது, தங்கள் பெயர் வந்துவிட கூடாது என்பதில் டோலிவுட் நடிகர்கள் எல்லாம் கடும் பிரயர்த்தனம்


ஆந்திராவும் தமிழகமும், ஆந்திர தமிழ் திரையுலகமும் இரட்டைகள், ஒன்றின் நிலை இன்னொன்றை பாதிக்கும், ஆந்திராவில் இவ்வளவு போதை விவகாரம் எனும்பொழுது அது தமிழகத்திலும் இல்லாமல் இருக்காது எனும் அளவிற்கு இன்னொரு கோணத்தில் செய்திகள் செல்கின்றன‌


இன்னும் இங்கு விசாரணையோ சிக்கலோ வரவில்லை, ஆனாலும் ஒருவேளை தமிழக நடிகர் நடிகையில் யாருக்கு இப்படி பார்ட்டியில் அந்த பழக்கம் உண்டு என விசாரிக்க தொடங்கினால் யாரிடம் கேட்க வேண்டும்?


சாட்சாத் தனுஷிடம்தான் கேட்கவேண்டும்


அதனால்தான் மனிதர் பேட்டிகளில் எல்லாம் பாதியில் எழும்பி சென்றுகொண்டிருக்கலாம்..



No comments:

Post a Comment