Saturday, July 29, 2017

அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஒரு கிராமம் , காவலர்களை தாக்கி கைதியினை மீட்டுசென்றதாக சில செய்திகள் பரவுகின்றன‌


அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது


அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கெட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாகும்




கதிராமங்கலத்தில் களமிறங்கி அடிக்க இறங்கும் காவல்துறை, மெரீனாவில் ஒரு எல்கேஜி பையன் வந்தாலும் விரட்டும் காவல்துறை இங்கு மட்டும் அமைதி காப்பதன் மர்மம் என்ன என்ற கேள்விகள் எழும்


சில காவலர்கள் தாக்கபட்டு கைதிகள் மீட்கபட்டது உண்மையா? இல்லையா? வாட்சப் தகவல் எதனையும் முழுக்க நம்பமுடியாது என தேடினால் ஒரு ஊடகமும் இன்னும் செய்தி வெளியிடவில்லை


ஏதோ நடந்திருக்கின்றது, என்ன என்பதுதான் தெரியவில்லை.


உண்மையிலே காவலர்கள் தாக்கபட்டு கைதி மீட்கபட்டிருந்தால், வீரப்பன் மீது காட்டிய அதே வேகத்தை காவல்துறை காட்டவில்லையென்றால் இந்த அரசு "யாருக்காகவோ" ஆட்சி நடத்துகின்றது என்பது மட்டும் உண்மையாகிவிடும்



No comments:

Post a Comment