Thursday, July 20, 2017

ஆண்பால் பெண்பால் அன்பால் ...



Image may contain: 1 person, smiling, textசிகப்பு ரோஜாக்கள் கமலஹாசன் பெண்களால் பாதிக்கபட்டு சைக்கோ ஆனதை படமாக பார்த்திருப்போம்


அப்படி ஆண்களாலும் பாதிக்கபட்டு உண்மையில் ஒரு மாதிரி ஆகிவிட்டவர்கள் நிறையபேர் இருப்பார்கள் போலும், அது சிக்கல் இல்லை ஆனால் அவர்கள் எழுத வந்து நிற்பதுதான் மகா சிக்கல்


சில மதவெறியர்களின் கொடூர எழுத்துக்கள் போல, சில சாமியார்களின் அரைகுறை உளறல் போல இந்த பெண்ணும் அப்பட்டமான ஆண் வெறுப்பில் எழுதிகொண்டிருக்கின்றது





சொந்த பாதிப்பினை ஏதோ உலகளாவிய பாதிப்பாக எண்ணுவது ஒரு வகை வியாதி

அந்த வியாதியில் பல வகையான ஆகாத சிந்தனை எல்லாம் வரும், அதனை எல்லாம் பொதுவில் எழுதமுடியுமா? முடியும் என்கின்றது விகடன் பத்திரிகை

இந்த அம்மணி ஆண்பால், பெண்பால், அன்பால், அமலா பால். சந்தர் பால், ஆவின் பால் என என்னமோ எழுதுகின்றார், பார்த்தால் உவ்வே ரகம்

பெரும் மனபாதிப்பும், குழப்பமும் இல்லாமல் இப்படி எல்லாம் எழுத முடியாது,

இவர் எழுதுவது எல்லாம் எழுத்து என்றால் "சரோஜா தேவி" போன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு தேசிய விருதும், அது என்ன தேசிய விருது? புக்கர் போன்ற அகில உலக விருதும் வழங்கபட வேண்டும்

விகடன் அதற்குத்தான் ஆசைபடுகின்றது.

எப்படி இருந்த விகடன்? எத்தனை பெரும் ஜாம்பவான்கள் எழுதிய விகடன், இப்பொழுது இப்படிபட்ட ஒருமாதிரி ஆட்களையும் எழுத வைத்து பார்த்துகொண்டிருகின்றது.

மாத்ரூபூதம் அளவிற்கு சீறும் அம்மணி என்ன படித்திருகின்றது என விசாரித்தால் அம்மணி அப்படி ஒன்றும் ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிக்கவில்லை, பெரும் போராளியும் இல்லை. எங்கோ பெற்ற கசப்பான அனுபவத்தை ஏதோ பெரும் புரட்சி போல சொல்லிகொண்டிருக்கின்றது.

அரைகுறை வைத்தியன் ஆபத்தானவன் என்பது போல, இந்த அரைகுறை புரட்சியாளர்களும் மகா ஆபத்தானவர்கள், பெரும் குழப்பத்தினை சமூகத்திற்கு கொடுப்பார்கள்.

இவரை விட ஐ.எஸ் இயக்க தலைவர் அல்பத்தாதியினை விகடனில் எழுத வைக்கலாம், இவர் அளவிற்கு அவர் சமூகத்திற்கு ஆபத்தானவர் அல்ல.













அந்த பெண்ணிய புரட்சிவாதி ஆண்பால், பெண்பால், அன்பால் என சொல்லிகொண்டிருப்பவர் யாரென தேடினால், Kavignar Thamarai வந்து,  இவர்தான் தியாகுவுடன் ஓடியவர், ஓடியதோடு மட்டுமன்றி எல்லாம் சுருட்டியவர் என சொல்லிகொண்டிருக்கின்றார்.

இந்த சமாச்சாரமெல்லாம் முன்பு வராத பத்திரிகைகள் இல்லை, பெரும் வில்லங்கமான செய்திகளாக அவை வந்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றன,

அவரா இவர்? இவரா அவர் என நினைக்கும்பொழுதே தலை சுற்றுகின்றது


இது முதலிலே தெரிந்திருந்தால்" ஓஓ அவரா அப்படித்தான் எழுதுவார்.." என சொல்லிவிட்டு நகரலாம்

தியாகு என்பவர் எப்படிபட்டவர் என்பது உலகிற்கே தெரிந்தது, அவருடன் அடைக்கலமானவர் எப்படி இருப்பார் என்பது எழுத்திலே தெரிகின்றது

இவர்தான் வாழும் அரிஸ்டாட்டிலாக தத்துவம் பேசுகின்றாரா? எல்லாம் தமிழ்நாட்டு தலைவிதி என சொல்லிவிட்டு நகர வேண்டியதுதான்

இதற்கு மேலும் தகவல் வேண்டுமென்றால், ஆண்பால் பெண்பால், என எல்லோரும் Kavignar Thamaraiயிடம் கேட்டுகொள்ளலாம்

"அன்பால்" என்றால் என்னவென்று விளக்க அவர் தயாராக இருக்கின்றார்.









No comments:

Post a Comment