முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு
இரு நாள் தூங்காமல் போர் நடத்தியதில்
காயம்பட்ட நெப்போலியன் களத்திலிருந்து வெளியேறிவிட்டான், அவன் தூங்கியே ஆகவேண்டிய நிலை
அந்த சேனைக்கோ என்ன செய்வதென அறியாத நிலை , அவனை எழுப்பியே ஆகவேண்டிய நிலை, சென்றார்கள்
அவன் தூங்கும் அறைக்கு வெளியே ஒரு மேஜையில் சில குறிப்புகள் இருந்தனவாம்
தான் வெளியேறிவிட்டாலும் என்னென்ன செய்யவேண்டும் என அவன் எழுதி வைத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்க சென்றான் அந்த மாவீரன்
அப்படியே சேனையும் போரிட்டு வெற்றிகொடி ஏற்றியது
கலைஞரும் எல்லா காலத்திற்கும் திமுகவிற்கு எல்லா வியூகமும் வகுத்துவிட்டுத்தான் ஓய்வில் இருக்கின்றார்,
இனி வெல்ல வேண்டியது சேனையின் பொறுப்பு
மராட்டிய ரஜினியையும்,பரமக்குடி பார்ப்பணரயும் விரட்டுவோம் : சீமான்
இதே வாய்தான் பிராமணர் எல்லாம் தமிழர் என்றது, இன்று இதே நாரவாய்தான் கமல் பிராமணர் என்கின்றது
இதற்கு இந்த தவளைவாயன் சீமான் இப்படி சொல்லிவிடலாம், "அதிமுகவினை எதிர்க்கவரும் எல்லோரும் எங்கள் எதிரிதான்"
தமிழ் கூறும் நல் உலகம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியும் அதுதான். அதாவது சீமான் போயஸ் தோட்டத்து வளர்ப்பு நாய்களில் ஒருவர். அதிமுகவினரை யாராவது சீண்டிவிட்டால் குரைப்பார், கடிக்க வருவார்.
ஆனால் விரைவில் அது எல்லோரிடமும் கல்லெறி வாங்கி
கொண்டு ஓடப்போவதும் உறுதி, கல்லடி பலமாக இருந்து செத்தாலும் சாகலாம்
No comments:
Post a Comment