Sunday, July 30, 2017

தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம்


தென்கிழக்கு ஆசியாவில் ஒருவித பதற்றம் தெரிகின்றது, அமெரிக்கா தன் படைகுவிப்பினை பெரும் அபாயகரமான ஆயுதங்களுடன் செய்கின்றது, ஏதோ முடிவெடுத்துவிட்டார்கள்


சீனா தன் ராணுவம் அமைக்கபட்ட 90ம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடுகின்றது, அதில் சீன அதிபர் எந்த ராணுவத்தையும் வீழ்த்த தயார் என சவால் விடுகின்றார், 90 ஆண்டுகளில் அவர்கள் தோற்றதே இல்லை என சவுடால் வேறு


ஜப்பான் அவர்களை போட்டு அடித்தது கொஞ்சம் அல்ல, சோவியத் யூனியன் அடித்த அடியில் அவர்கள் அமெரிக்க அதிபரிடமே சரண்டைந்தார்கள், அப்பொழுதெல்லாம் இந்த ராணுவம் என்ன செய்தது என சீனர்களிடம் கேட்பது யார்?




அமெரிக்க படைகுவிப்பினை அடுத்து ரஷ்யாவும் தன் கடல்படை சாகத்தை செய்து அசத்தியிருக்கின்றது, புட்டீன் பார்த்து ரசித்திருக்கின்ன்றார்


இந்த ரஷ்யாவும் சீனாவும் வடகொரியாவுடன் எல்லையினை பகிரும் நாடுகள் என்பதால் பிரச்சினைவின் வீரியம் புரிகின்றது


பெரும் அபாயகரமான கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவிக்க தொடங்கியிருப்பதால் இனி எப்பொழுதும் எந்த செய்தியும் வரலாம் என்கின்றது தென்கிழக்கு ஆசிய பதற்றம்




No comments:

Post a Comment