Thursday, July 27, 2017

ஏன் இப்படி சொன்னார் மோடி?

download.jpg


ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும், ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை!


நாசமாக போனது மோடியின் வருகை


அப்துல் கலாம் வரிசையில் வைக்கபடவேண்டியவரா குற்றவாளி என தீர்ப்பிடபட்ட ஜெயலலிதா?




இப்படி உளறத்தான் டெல்லியிலிருந்து வந்தாரா மோடி?


ஒரு நாட்டின் பிரதமர் , ஒரு குற்றவாளிக்கு இங்கு சம்பந்தமில்லாமல் ஏன் அஞ்சலி செலுத்தவேண்டும்?


அக்கா தமிழிசை, நீங்களாவது இதனை எடுத்து சொல்ல கூடாதா?


ஏன் இப்படி சொன்னார் மோடி?


அப்துல்கலாம் போன்றவர்கள் பிறந்த தமிழகத்தில்தான் ஜெயலலிதா போன்றவர்கள் இருந்தார்கள் என மறைமுகமாக சொல்கின்றாரோ??


சொல்லகூடாத வார்த்தையினை சொல்லிவிட்டார் மோடி.


இப்படித்தான் எல்லா இடத்திலும் எழுதி கொடுப்பதை படித்துவிடுகின்றாரோ?


கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கின்றது


நல்லவேளையாக சசிகலா கனவும் பலிக்கட்டும் என அதில் எழுதபடவில்லை!


எழுதியிருந்தாலும் மோடி அவர் போக்கில் வாசித்திருப்பார் போல‌


சசிகலா என்ன ஓவியா பெயர் இருந்தாலும் கொஞ்சமும் யோசிக்காமல் நம் பிரதமர் படித்திருப்பார்


சசிகலா, தினகரன் பெயரை எழுதாமல் விட்டவன் எவன் என இப்பொழுது போயஸ் கார்டனில் தேடிகொண்டிருப்பார்கள், சிக்கினால் அவ்வளவுதான்.


ஜெயலலிதா பெயரினை சொல்லிவிட்டு சசிகலா, தினகரன் பெயரினை மோடிக்கு சொல்லாமல் மறைப்பது எவ்வளவு பெரும் அநியாயம்? விடுவார்களா?



No comments:

Post a Comment