Monday, July 31, 2017

அணுவீச்சை கட்டுபடுத்த வீணை வாசிப்பா?




Image may contain: textஅணுகுண்டு தாக்குதல் அச்சத்தில் இருக்கும் தென்கொரிய, ஜப்பான், அமெரிக்க தலைவர்களும், உள்ளுக்குள் அதே பயத்தில் இருக்கும் வடகொரிய வெள்ளை தக்காளியும் மிக வேகமாக வீணை கற்றுவருவதாக தகவல்..


இந்த வித்தை ஈரானுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்கா ஈரான் மீது வீணை தடையினை செய்திருக்கின்றது இஸ்ரேல்


இந்தியாவிற்கு போலி வீணைகளை தயாரித்து அனுப்புங்கள், இசை வராமல் போகட்டும் என உத்தரவிட்டிருகின்றது சைனா





எங்களுக்கு வீணை வாசிக்க தெரியாதே என அழுகின்றது பாகிஸ்தான்

இனி துப்பாக்கி எதற்கு? ஏவுகனை எதற்கு? எல்லோரும் வீணை வாசித்தே எதிரியினை கொல்லலாம், நாட்டை காக்கலாம்

முதலில் இந்த பக்தர்களை புக்குஷிமாவில் இவர்களை வாசிக்கவிட்டால் நல்லது, அட புக்குஷிமா எதற்கு? கல்பாக்கம்,கூடன்குளம் பக்கம் வீணையோடு அனுப்பலாம்.

இனி இவர்கள் ஆராய்ச்சி தவில், மிருதங்கம், நாதஸ்வரம் என தொடரும்

அதிலும் சொல்வார்கள், தந்தையின் நாதஸ்வர இசை கேட்டு வளர்ந்துதான் கலைஞருக்கு அம்ம்புட்டு அறிவு...

(சரஸ்வதியும், நாரதரும் வீணையோடு அலைவது எதற்கு? வான்வெளியின் அணுவீச்சை கட்டுபடுத்த, சும்மா அல்ல‌)













 


 

No comments:

Post a Comment