இலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ தெரியாது, விசித்திரமான சம்பவம்
அந்த விசித்திர சம்பவம் முன் நடந்தது கொடூர சம்பவம்
ஆம், விந்தியா எனும் தமிழ்பெண் , தமிழர்களால் கற்பழிக்கபட்டு மிக கொடூரமாக கொல்லபட்டார். யார் விசாரிப்பார்கள் ? சிங்கள அரசுதான் விசாரிக்கின்றது
அந்த மாணவி கொல்லபட்ட விதத்தை கேட்டால், அவர்களை எல்லாம் உடனே விமானம் ஏறி சென்று கொல்லவேண்டும் என்றுதான் கோபம் வரும், அவ்வளவு கொடூரம்
அந்த வழக்கிற்கு அந்த தமிழ்குற்றவாளிகள் தரப்பு எவ்வளவோ இடைஞ்சல் கொடுத்தாலும் அரசு விடாபடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்திற்று
இப்பொழுது விசாரிக்கும் ஒரு நீதிபதி தமிழர், பெயர் நெடுஞ்செழியன், இவரின் பாதுகாவலர் பெயர் சந்திரசேகரா சிங்களர்
இந்நிலையில் பல மிரட்டல்களுக்கு பின்னும் நீதியாக விசாரிக்கும் அந்த தமிழ் நீதிபதியினை சுட்டிருக்கின்றார்கள், அதில் நீதிபதியினை காப்பாற்றிவிட்டு அந்த சிங்கள காவலர் உயிரிழந்திருக்கின்றார்
கவனியுங்கள்
கொல்லபட்டது தமிழ்ப்பெண், கொன்றது தமிழர்கள், விசாரிப்பதும் தமிழன், அந்த நீதிபதியினை சுட்டவன் தமிழன், அந்த நீதிபதிக்காய் செத்தவன் ஒரு சிங்களன்
இதுதான் இன்றைய இலங்கையின் நிலை
இங்கு இந்த பத்திரிகைகள் இதனை எழுதுமா என்றால் எழுதாது, இந்த ஈழ விவகார வியாபாரிகளான சீமான், வைகோ, வேல்முருகன் , திருமா எல்லாம் இதனை பற்றி பேசுவார்களா என்றால் இல்லை
எல்லாம் கடப்பாரை விழுங்கியது போல மகா அமைதி
இந்த ஈழ விவகாரம் எல்லாம் இவர்களிடம் ஒரு சிணுங்கலையும் கொடுக்காது, இதுவே தமிழ்பெண்ணை சிங்களன் கொன்றிருந்தால், தமிழ் நீதிபதியினை சிங்களன் சுட்டிருந்தால், "ஐயகோ புலிகள் இல்லாமல் பாதுகாப்பு இல்லை, என் இனம் அழிகின்றது, ஏய் மோடி , ஏய் கலைஞர், ஏய் காங்கிரஸ்.." என குட்டிகரணம் அடிப்பார்கள்.
சீமான் எல்லாம் நாதியற்ற இனமா நாம் என பல பல்டி அடிப்பார்
ஆனால் தமிழன் தமிழனால் அங்கு கொல்லபட்டால், தமிழனுக்காக சிங்களன் உயிர்விட்டால் இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
No comments:
Post a Comment