Monday, July 24, 2017

தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல





வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு


தமிழ்நாட்டு முதல்வர் பழனிச்சாமி என்ன ஹீரோயிசமா காட்டிகொண்டிருக்கின்றார், இதெல்லாம் அங்கிளுக்கு தெரியாதா? தெரியும் ஆனால் அன்னார் அதிமுகவினை பகிரங்கமாக எதிர்க்கமாட்டார்


புதுச்சேரி பக்கம் சென்று அங்கிள் அதனை மீட்டு, தமிழகத்தோடு சேர்த்து அகண்ட தமிழகமாக மாற்றும் போரில் இறங்கிவிட்டார் என்பது புரிகின்றது. ஆனால் புதுச்சேரி மக்கள் தமிழகத்தோடு இணைவார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?





அதனால் என்ன? இழுத்து வந்து இணைத்துவிடுவார் அங்கிள் சைமன்.









ராமநாதபுரம் அருகே பாகிஸ்தான் முதியவர் உள்பட 3 பேர் கைது

இது மிக உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம், தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல என்பதுதான் உண்மை

மணிரத்னம் ரோஜா படத்திலும், கமலஹாசன் விஸ்வரூபம் படத்திலும் அதனைத்தான் சொன்னார்கள், காஷ்மீரிய போராளி முதல் பெரும் தீவிரவாதிகள் வரை இங்கு எளிதாக வந்துபோக முடிகின்றது


ராமநாதபுரத்தில் ஒரு பாகிஸ்தானி பிடிபட்டிருக்கின்றார், இவருக்கு இங்கு என்னவேலை? சம்பந்தம் பேச எல்லாம் வந்திருக்க முடியாது

இந்த உண்மைகளை கமல் ஒரு படத்தில் சொன்னால் வரிந்துகட்டி வந்தார்கள், இவ்வளவிற்கும் அது சினிமா

ஆனால் இன்று மிக பகிரங்கமாக ஐ.எஸ் தீவிரவாதி சென்னையிலும், பாகிஸ்தான் நபர் மதுரைபக்கமும் பிடிபடும்பொழுது அந்த மார்க்க சிந்தனை போராளிகளை, இஸ்லாமியரின் மானம் காக்கும் அதிரடி காவல்காரர்களை காணவே இல்லை

இப்பொழுதெல்லாம் வரவே மாட்டார்கள்...

கமலஹாசன் அரசியலை கேள்வி கேட்க தான் போதும் என்கின்றார், அதனால் இம்மாதிரி கேள்விகளை அவர் கேட்கமாட்டார், நாமே கேட்கலாம்

விஸ்வரூபம் படத்தில் கமல் இஸ்லாமியரை சீண்டுகின்றார், தமிழகத்தில் அந்நிய இஸ்லாமிய தீவிரவாதி இருப்பதாக சொல்வதெல்லாம் பொய் என சொன்னவர்களை எல்லாம் எங்கே?





 கமலஹாசன் அதிமுகவில் சேர செல்லூர் ராஜூ அழைப்பு

கலைஞர் இருந்திருந்தால் எப்படி கேட்பார் தெரியுமா?

"அதிமுகவில் கமலஹாசன் எதற்கு? வைகை அணையினை தெர்மாக்கோல் போட்டு மூடுவதற்கா?"





 



 

No comments:

Post a Comment