Tuesday, July 25, 2017

கொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை ...

சிறுதாவூர் பங்களா மர்மம், அப்பல்லோ மர்மம், கொடநாடு மர்மம் , கூவத்தூர் மர்மம், பரப்பான அக்ரஹார சிறை மர்மம் என்றேல்லாம் சர்ச்சை வந்தது அதாவது வேறு விவகாரங்கள்


ஆனால் தமிழக தலமை செயலகத்திலே மர்மமாம், குட்கா சம்பந்தபட்ட கோப்புகளை காணவில்லையாம்.


மர்மமான வீட்டு பூசாரியினை ஆலய கருவறையில் விட்டால் அங்கும் மர்ம விஷயங்கள் நடக்கும், தலமை செயலகம அப்படி ஆகிவிட்டது




இவர்கள் காலப்ட்ட இடமெல்லாம் இப்படி பல மர்மங்கள் நடக்கும் போல, மாநிலத்தின் தலமை செயலகத்திலே மர்ம விஷ்யங்கள் நடக்கிறதென்றால் மாநிலம் எப்படி இருக்கும்?


மிகபெரிய மர்ம மாநிலமாக தமிழகம் மாறிகொண்டிருக்கின்றது.


முன்பு திருச்செந்தூர் வைரவேல் மர்மமாக காணாமல் போனதற்கே நடையாய் நடந்து பெரும் விஷயங்களை வெளிகொண்ர்ந்தவர் கலைஞர், இன்று அவரும் இல்லை


நடக்கவேண்டிய நேரத்தில் நடக்காமல், திடீரென நடக்க கூடாத நேரத்தில் நடப்பவர் ஸ்டாலின் அவர் அப்படித்தான்


இனி தமிழகத்தின் மர்மங்களை வெளிகொணர யார் இருக்கின்றார், வைரமுத்து சொன்னது போல நல்ல தலைவர்களுக்கு பெருன் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது


கொடநாட்டிலிருந்து , தலமைசெயலகம் வரை பல பொருட்கள் மர்மமாக காணாமல் போகின்றன, ஆக தமிழர்களே உங்கள் கிட்னியும் மர்மமாக காணாமல் போகலாம் கவனமாக இருங்கள்



No comments:

Post a Comment