போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டத்தினை பாய்ச்சுகின்றது, பெரும் மிரட்டலான விஷயம் இது
கவனியுங்கள், இவர்கள் எதற்காக கிளம்புகின்றார்கள்? பசுமை காக்க, சுற்று சூழல் காக்க, மீத்தேன் என்பது பெரும் பசுமை எதிரி என கிளம்புகின்றார்கள், இவர்களைத்தான் குண்டர் என உள்ளே தள்ளுகின்றது அரசு.
ஆக தமிழ்நாடு நாசமாக்கி தீருவது என இந்த ஆட்சி கங்கணம் கட்டி அலைகின்றது, ஆற்றுமண், கடல்மண், மலை என எல்லாம் விழுங்கி இன்னமும் விழுங்கத்தான் வெறியோடு அலைகின்றது
இதனை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம்
சரி இந்த பசுமை காவலர்கள், தமிழகத்தை பசுமையாய் ஆக்கி தீருவோம் என முழங்குபவர்கள் யாராவது இதனை கண்டிக்கின்றாரளா என்றால் இல்லை
அதாவது அதிமுக அரசு எது செய்தாலும் இவர்கள் கண்டுகொள்வதில்லை, மாறாக திமுக என்றால் போதும் எல்லா சிக்கலுக்கும் காரணம் திமுக, தமிழகத்தை கெடுத்தது திமுக, அது இது என பொங்குவார்கள்
இப்பொழுது இந்த மாபெரும் அடக்குமுறையில் இருந்து தமிழகத்தை காக்க யாரால் முடியும் என கேளுங்கள், ரகசியமாக காதுக்குள் திமுகவால் மட்டும் முடியும் என்பார்கள்
சரி திமுக ஆட்சியில் போராடீனிர்களே என்றால், ச்சே அருமையான ஆட்சி அது, திமுக அரசு என்றால் எவ்வ்வளவும் போராடலாம், அவமானபடுத்தலாம், திட்டி தீர்க்கலாம் ஒரு நடவடிக்கையும் இருக்காது என மகிழ்ந்து சொல்வார்கள்
ஆக இவர்கள் 5 பைசா பெறாத பிரச்சினைக்கெலலம் சுதந்திரமாக திட்டி தீர்க்க
திமுக வேண்டும், இது போன்ற பெரும் அடக்குமுறைகளை சந்திக்க திமுக வேண்டும்
ஆனால் திமுக தமிழகத்தை கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பார்கள், அதிமுக அடித்து நொறுக்கும்பொழுது சத்தமே காட்டமாட்டார்கள்
அவர்கள் அப்படித்தான்..
சும்மா இருக்கும் பொழுது கலைஞர் ஒழிக திமுக ஒழிக என்றவர்கள் எல்லாம், இப்பொழுது அதிமுக அரசு அடிக்கும்பொழுது எங்கே கலைஞர்? எங்கே திமுக? கலைஞர் வாழ்க, திமுக வருக என மனதிற்குள் சொல்லிகொள்கின்றார்கள்
No comments:
Post a Comment