Thursday, July 27, 2017

அகண்ட பாரதம் அமைக்க தொடங்கிவிட்டார்கள்!



Image may contain: 4 peopleஇந்து மக்கள் கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூடுகின்றார்களாம், அதாவது அந்த ஜி, இந்த ஜி என பல ஜிக்கள் கலந்து கொள்வார்களாம்.


பல ஜி'க்கள் கலந்து கொள்வதால் இது ஜி'7 உச்சமாநாடு, ஜி20 உலக மாநாடு என நினைத்துவிட கூடாது, இந்த ஜி3 வேறு வகையறா, Gillettine கூட ஜியில் தான் தொடங்கும்


அவர்கள் கட்சி, அவர்கள் ஜி3 கூட்டம் அது சிக்கல் இல்லை


ஆனால் இந்த காசியானந்தன் என்பவரும் இந்த "ஜி" கூட்டத்தில் கலந்திருப்பதுதான் ஆச்சரியம்


மிஸ்டர் காசியானந்தன், ஈழத்தை அழித்தது இந்தியா என ஒப்பாரி வைத்தவரும் நீர்தான், இப்பொழுது காவி படையுடன் கைகோர்த்து நிற்பவரும் நீர்தான்


காங்கிரசை, திமுகவினை திட்டுவீர்கள், ஆனால் 2009ல் ஒரு வார்த்தையும் பேசாமல் ரகசியமாக காங்கிரசை ஈழவிவகாரத்தில் ஆதரித்த பாஜகவோடு கைகோர்ப்பீர்?, என்ன அரசியல் இது?


சீமான் உங்களை எங்க அண்ணன் என சொன்ன அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது


யார் காசி ஆனந்தன்?


Image may contain: one or more peopleபுலிகளின் ஆஸ்தான கவிஞர், சாதரண கவிஞர் அல்ல, "வீரன், மாவீரன், தேச பற்றாளன், தியாக தீபம், தேசத்தின் குரல், மேதகு, தியாகி, துரோகி, இனதுரோகி " என எல்லா புலிகளின் பட்டங்களும் இவரால்தான் சூட்டபட்டன‌


இவர் கரும்புலி, வான்புலி, கடல்புலி எல்லாம் அல்ல கவிப்புலி


ஈழபோராட்டத்தின் பெரும் பாடல்கள் இவரால்தான் எழுதபெற்றவை, நிச்சயமாக இலங்கை குடிமகன் , அல்லது ருத்திரகுமாரன் கடத்திகொண்டு ஓடிய தமீழீழ குடிமகன்


இந்த கவிப்புலி எப்பொழுது இந்து மக்கள் கட்சியின் உறுப்பினர் ஆனார்? இந்திய கட்சியில் இவருக்கு என்ன வேலை?


அதுவும் தமிழுக்காகவே போராட்டம் நடத்தினோம், செத்தோம், சாவோம், என சொன்ன புலி, புலிகளின் பாடலான மூச்சாகி வாழ்வாகி வந்த தமிழ் என பாடிய புலி, இந்த சமஸ்கிருத கும்பலோடு "ஜி" போடுவது ஏன்?


இவரோடு யோகேஸ்வரன் எம்பியும் வந்திருக்கின்றார்


ம்ம்ம் ஏதாவது புரிகின்றதா?


சமீபத்தில் தமிழிசையின் இலங்கை பயணம், அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியில் ஈழத்தவர் இணைப்பு எல்லாம் எதனையோ சொல்லவில்லையா


இனி காவிபடையில், காவிபுலிகளும் இருக்கலாம், தமிழீழம் பேசியவர்கள் இனி இந்துத்வா பேசலாம்


பேசலாம், பேசலாம் பேசிகொண்டே இருக்கலாம், ஆனால் இதனால் ஈழம் அமையுமா என்றால் ஒருகாலமும் இல்லை, அது வேறுவிஷயம்


இருந்தாலும் இனி கச்சதீவு விவகாரம், மீணவர் விவகாரங்களை, பிரபாகரனும் அமைக்காத இந்த காவி புலிகள் பார்த்துகொள்ளுமா என்பது இனிதான் தெரியும்


புலிகளிடம் இருந்தபொழுது மண்டியிடாத வீரம் என சொல்லி பலர் உணர்ச்சியினை தூண்டிய அந்த காசி ஆனந்தன், இப்பொழுது காவி பெருக்கெடுக்க ஜி மத்தியில் வந்துவிட்டார்


இப்பொழுது எழும் சந்தேகம் ஒன்றுதான், முன்பு ஆயுத பூஜையில் துப்பாக்கி வைத்து பூஜை செய்து சர்ச்சையானவர் அர்ஜூன் சம்பத், இப்பொழுது புலிகளுடன் வேறு காட்சியளிக்கின்றார்.


இனி எதற்கு சுதந்திர‌ தமிழீழம்??, இந்து இந்தியாவில் ஒரு மாநிலமாக தமிழீழம் இணைந்தால் போதாதா? அதுதான் நடக்கும் போலிருக்கின்றது.


ஆக அகண்ட பாரதம் அமைக்க தொடங்கிவிட்டார்கள்,


இதனை பற்றி கவலைபடவேண்டியது காவல்துறையும் அரசும் நமக்கென்ன?














 


 

No comments:

Post a Comment