Monday, July 31, 2017

இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது




Image may contain: one or more people, people standing and outdoorஒரு சிலர் சொல்லிகொண்டிருந்தான், கிறிஸ்தவர் பணத்திற்காக மதம் மாறினர் என்றும், இஸ்லாமியர் அதிகாரத்திற்காகவும் மதம் மாறினர் என்றும் உளறிகொண்டிருந்தான்


அவனெல்லாம் உ.பி வீடியோவினை பார்த்தால் விஷயம் புரியும்


இந்த கொடுமைதான் அக்காலமும் நடந்தது, இதனை விட கொடுமையான விஷயம் எல்லாம் நடந்தது, புத்தனனும் மகாவீரனும் ஓரளவு மாற்றம் கொடுத்தாலும் அது மறுபடி அந்த பூதம் எழுந்து நின்றது





இக்கொடுமையில் வாழமுடியாமல்தான், இவர்களின் கொடூர சாதிவெறுப்பிற்கு தப்பித்தான், மனிதனை மாட்டை விட கேவலமாக பார்க்கும் இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது என்பதால்தான் அபலைகள் அந்நிய மதம் தேடினர்.

புத்தம் அழிக்கபட்டபின், இஸ்லாமும் கிறிஸ்தவமும், ஜெராஸ்டிரியமும் அவர்களுக்கு அடைக்கலமாயின.

கிராமத்து சிறுவர்கள் ஓணான்களை வதைப்பது போல, சரச நடமனாடும் பாம்புகளை சுற்றி நின்று கல்வீசி ரசிப்பதை போல, இந்த சக மனிதர்களை இம்சிக்கும் கொடுமை காலம் காலமாக உண்டு, வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும் சாகும்?

ஆனால் வாயுள்ள ஜீவன்கள், தன் காயத்தை துடைத்து மருந்திட்டு வாஞ்சையுடன் பாதுகாக்கும் ஒருவன் பின் செல்லாதா?

நாயே நன்றியோடு இருக்கும்பொழுது, நாயினும் கீழாய் நடத்தபட்ட மக்கள், தங்களுக்கு அங்கீகாரம் தந்தவர்கள் பின் செல்லமாட்டார்களா?

பின்னாளில் அம்பேத்கார் அதனையே செய்தார், சாதி முறை கடவுள் படைத்ததாக இருந்தால் கடவுளே பொய் என துணிந்து நின்றார் பெரியார்

என் மரியாதை எனக்கு முக்கியம், என் மானம் எனக்கு முக்கியம் , நாங்கள் உங்கள் மூட சட்டங்களுக்கு கட்டுபட மாட்டோம் என துணிந்து நின்றார் பெரியார்.

உறுதியாக சொல்லலாம், இந்துமதம் அற்புதமான மதம் ஆனால் அதன் பெரும் குறை இந்த சாதி அமைப்பு

அவர்கள் காசுக்கோ , உணவிற்கோ மதம் மாறியவர்கள் அல்ல, இப்படி உபியில் அடித்தது போலத்தான் , இந்தியா முழுக்க அடித்தார்கள், கன்னியாகுமரியிலும் அடித்தார்கள், சூத்திர நாயே உனக்கேன் மேலாடை என சொல்லி அடித்தார்கள்.

அவர்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் அளித்தவர்கள் பின்னால், ஆடை கொடுத்தவன் பின்னால், கல்வி கொடுத்தவன் பின்னால் அம்மக்கள் சென்றார்கள், அம்மதங்களை தழுவினார்கள்.

ஒரு காதலை பொறுக்காதவர்கள், அந்த சூத்திர சாதி சந்தோஷமாக இருக்க பொறுக்காதவர்களா கல்வி கொடுப்பார்கள்?

கல்வி கிடைத்த இடத்திற்கு அவர்கள் இதனால்தான் ஓடினார்கள்.

காசுக்கும், உணவிற்கும் மாறவில்லை அவர்கள், மாறாக மானத்திற்கும், சமத்துவதுவத்திற்கும் ஏங்கி அழுததால் மாறியவர்கள்

இப்படி அடித்து விரட்டுவார்களாம், கேவலபடுத்துவார்களாம் இதனை எல்லாம் சகித்துகொண்டு இருக்கவேண்டுமாம், அவர்கள்தான் இந்தியர்களாம், தேசபற்று மிக்கவர்களாம்

இதனை பொறுக்க சகிக்காமல் , அடுத்த மதம் ஓடியவர்கள் உணவிற்கும், காசுக்கும் ஓடியவர்களாம், துரோகிகளாம்

புரியாதோர் இனியாவது புரிந்துகொள்ளட்டும்...













 


 

No comments:

Post a Comment