எசமான், உங்க திட்டங்களுக்கு எதிரா பேசுரவன எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டு உங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கேன், கருணை காட்டுங்க எசமான் ஆட்சியெல்லாம் கலைச்சிராதீங்க....
சே..சே நாங்க என்ன முட்டாளா? தனியா 132 எம்.எல்.ஏ வாங்கி தமிழகத்தில் நாங்க ஆட்சி அமைக்க முடியுமா? நீங்கள் இருக்கும் பொழுது நாங்க ஏன் ரிஸ்க் எடுக்கணும்? அந்த பன்னீரெல்லாம் நம்ம பய, பயப்படாம போங்க. ஆனாலும் நீங்கதான் தமிழ்நாட்டை ஆளுவதாக சிலர் நம்புகின்றார்கள் பார்த்தீர்களா? அதுதான் காமெடி
சொல்லுங்கள் பழனிச்சாமி, அது உங்கள் ஆட்சியா? நெசமாவா??? ஹாஹாஅஹா ஹஹஹஹஹாஹா....
உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும்படி மருந்துக்கம்பெனிகள் என்னை மிரட்டுகின்றன : மோடிக்கு எழுதிய கடிதத்தில் சத்யராஜ் மகள் பரபரப்பு புகார்
வேதனைபடுவதற்கும் கவலைபடுவதற்கும் மட்டுமே பிரதமராகியிருப்பவர் அவர்.
மாட்டுற்காக மனிதரை கொல்கின்றார்கள் என கடிதம் எழுதினாலே வேதனை தெரிவிக்கும் பிரதமர் அவர், இந்த கடிதத்திற்கும் நிச்சயம் வேதனை தெரிவிப்பார்
ஏம்மா, அவரே உலகம் சுற்றிவிட்டு டயர்டாக வந்திருக்க்காக, அவுகளை போய் வேதனைபடுத்துவது நல்லாவா இருக்கு?
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒருத்தங்க இருக்காக, அவுகளுக்கு கடிதம் எழுதினால் என்ன?
தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் : செய்தி
நல்லது, அப்படியே பாரதியாரின் "வந்தே மாதரம் என்போம்", "தாயின் மணிக்கொடி பாரீர்" போன்ற தேசபக்திபாடல்களை வடக்கத்தியவர்களும் தமிழில் படிக்கவேண்டும் சட்டம் இயற்றுங்கள்.
தாகூருக்கும், பக்கிம் சட்டர்ஜிக்கும் கொஞ்சமும் குறந்தவனல்ல பாரதி, அவன் பாடல்களும் தேசபக்திக்கு குறைவில்லாதவை
சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு- காய்கறி, பழங்களை ஆம்புலன்சில் அனுப்பினார் சப்-இன்ஸ்பெக்டர்...
இந்த மணிரத்தினத்தின் நாயகன் பட காட்சிகள் சமூகத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment