Monday, July 31, 2017

மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது





மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது, சில மாநிலங்களில் இனி அது மூடபடலாம், பின் அது கோசாலைகளாக மாற்றபடலாம், ஊழியர்கள் பசுகாவலர்களாகலாம்


ஆனால் தமிழகம் 1967ல் இருந்தே இவ்விஷயத்தில் தனித்து நிற்கின்றது, மத்திய அரசின் உதவி குறைக்கபட்டாலும் அது இயங்கிகொண்டுதான் இருக்கும், தமிழக அமைச்சர் அதனைத்தான் சொல்கின்றார்.


இதனை வைத்தேதான் ஆட்சிக்கே வந்து, அதனை தொடர்ந்து அது சாதனை என சொல்லிகொள்ளும் அரசுகள் இவை, ரேஷன் கடைகளை மூடவே முடாது





நிச்சயம் தமிழக ரேஷன் கடைகள் தொடர்ந்து இயங்கும் சந்தேகமில்லை, மதுகடைகள் இருக்கும் வரை அது சாத்தியம்

கவனித்தால் ஒரு விஷயம் புரியும்

முன்பெல்லாம் மத்திய அரசின் நிதிகளை மறைத்து மொத்தமும் தாங்களே செய்வது போல தமிழக அரசு காட்டிகொள்ளும்,

இனி மத்திய அரசு உதவியினை நிறுத்தினாலும் அந்த சுமையினை சுமக்க மாநில அரசு தயாராக இருக்கவேண்டும், இல்லையென்றால் மாநிலம் மொத்தமாக சேர்ந்து மாநில அரசை குதறியே விடும்

இப்போதைக்கு தமிழக ரேஷன் கடைகளுக்கு ஆபத்தில்லை, ஆனால் செலவுகள் கூடும், கூடினால் என்னாகும்?

மதுகடைகள் அதிகரிக்கலாம்..




 

 



 

No comments:

Post a Comment