
இந்த ஜிஎஸ்டி வரி நாட்டிற்கு அவசியமான ஒன்று, ஒரு இந்தியனாக இதனை வரவேற்கின்றோம், கூட்டணி அரசாங்கத்தால் இதனை நிச்ச்யம் கொண்டு வந்திருக்க முடியாது, அது இது என இழுத்து கிடப்பில் போட்டிருப்பார்கள்
மிக தனிபெரும்பான்மையுடன் திகழும் பாஜக அரசு இதனை செய்திருக்கின்றது, நாட்டிற்கு தேவையான விஷயங்களை செய்யும்பொழுது பாராட்டத்தான் வேண்டும்
இதன் பலம் நிச்சயம் நல்லதாக இருக்கும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதற்குள் புதிய இந்தியா பிறந்துவிட்டது, தவழ்கின்றது, பல் முளைத்துவிட்டது, நடக்க தொடங்கிவிட்டது என்பது எல்லாம் ஓவர்
இதனை எதிர்க்க ஒன்றுமே இல்லை, அரசு என்ன செய்தாலும் அதனை எதிர்க்க ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும், அது கத்திகொண்டே இருக்கும், ஒன்றும் செய்ய முடியாது
அவர்களை விட்டுவிடலாம்
ஜிஎஸ்டி என விதித்ததோடு அரசு தன் கடமையினை செய்கின்றது, மக்களுக்கும் பொறுப்பு உண்டு. எந்த பொருள் வாங்கினாலும் அதற்குரிய பில்லையும் சேர்த்து வாங்க வேண்டும்
வியாபாரிகளில் சில குதர்க்கர்களும் உண்டு, பில் தராமல் வேறு சலுகைகள் தந்து ஏமாற்றபார்ப்பார்கள், அப்படி வாங்கினோம் என்றால் அது தேசதுரோகம், அங்கு எப்படி ஜிஎஸ்டி வசூலாகும்
பொறுப்பு எல்லோருக்கும் உண்டு, இது எல்லா நாடுகளிலும் உள்ள விஷயம், அதனை நாமும் செயல்படுத்துகின்றோம், எல்லா நாட்டு மக்களை போல நாமும் பொறுப்பாக நடந்தால் ஒழிய நமக்கு பலன் இல்லை
இந்த வரி எங்கு செல்லும்? மோடி தூக்கி கொண்டு ஓடுவாரா? அல்லது அருண்ஜெட்லி அதன் மேல் புரள்வாரா? எங்கும் செல்லாது
மாறாக சாலை, குடிநீர், கல்வி, இதர வசதிகள் என நமக்கே திரும்பவரும், அதாவது நம் பணம் எங்கும் செல்லாது, நமக்கே வசதிகளாக திரும்பும்
கொஞ்சம் கண்மூடி சிந்தியுங்கள், இந்நாட்டில் கல்வி, சாலை, மருத்துவம், பாலம், தொலை தொடர்பு, நூலகம் என எவ்வளவு வசதிகளை அனுபவிக்கின்றோம், இவை எல்லாம் எவ்வளவு செலவு பிடிக்கும் விஷயங்கள்?
நாமெல்லாம் பாதுகாப்பாக தூங்க, வேலை செய்ய, சண்டையிட, அல்லது சுதந்திரமாக ஏதோ இந்நாட்டில் செய்ய எல்லையில் பாதுக்காக்கும் வீர்களுக்கான செலவு என்ன?
உள்ளூரில் தெருசண்டை முதல் செயின் களவு அழைக்கும் காவல் துறைக்கான செலவு என்ன? அவர்களின் உபகரங்களுக்கான செலவு என்ன?
அதாவது நமக்கான பெரும் பாதுகாப்பு செலவு ஏராளம், நம் பணம் அப்படித்தான் நமக்கே பல வழிகளில் திரும்ப வரும், நமக்கே தெரியாமல் அனுபவத்துகொண்டுதான் திட்டிகொண்டிருக்கின்றோம்
இந்த வரிமுறை மூலம் அரசு வருமானம் பெருகினால் இன்னும் தரமானதாக கொடுக்க முடியும், அரசு அதனைத்தான் செய்கின்றது
மோடிக்கும் நமக்கும் என்ன வாய்க்கால் தகறாறா? ஒன்றுமிலை. அவர் இந்த நாட்டின் பிரதமர். அவர் நல்லது செய்யும் பொழுது, இந்நாட்டிற்கு நல்ல விஷயங்களை அவர் செய்யும்பொழுது பாராட்டியே தீரவேண்டும்
ஒரே நாடு, ஒரே வரி என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு நாட்டுக்கு ஒரே கரன்சி எனும் பொழுது ஒரே வரி இருப்பதுதான் முறை, அதனைத்தான் செய்கின்றோம்
இந்த சீர்திருத்தம், காலத்திற்கு ஏற்ற சீர் திருத்தம். ஆனால் எல்லாவற்றையும் கட்சி, அரசியல் என பார்க்கும் இந்த பாழ்பட்ட அரசியலில் இது சிக்குவதை கண்டிக்கலாம்
இதனை கண்டிப்பாக ஏற்றுகொள்ள வேண்டும் அதுதான் தேசபக்தி, தேச கடமை
இதில் இந்த சினிமாக்காரர்களுக்கு கோபமாம், திங்கள் முதல் அடைக்க போகின்றார்களாம்,
இவர்களுக்கு என்ன வந்தது? மக்கள் சினிமா நன்றாக இருந்தால் வந்து பார்க்க போகின்றார்கள், ஜிஎஸ்டி வரியினால் சினிமாவிற்கு வரமாட்டோம் என எவன் இவர்களிடம் சொன்னான்?
பாகுபலி போன்ற படங்கள் வசூலில் குறைந்ததா, அல்லது போன்ற படங்கள் இலவச காட்சி என்றாலும் யாரும் வந்தார்களா?
இல்லை நிச்சயமாக இல்லை
மாறாக இவ்வளவு காலமும் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கின்றார்கள், இந்த துல்லியமான வரிவிதிப்பில் இவர்கள் சிக்கி கொள்ள போகின்றார்கள், அதனால் தான் இந்த கொதிப்பு அடைப்பு
இது என்ன மக்களுக்கு உணவு வழங்கும் வயல்களா? அல்லது மருத்துவ மனைகளா அல்லது ராணுவத்தினருக்கான பணிமனையா?
இவர்கள் அடைப்பதனால் என்ன ஆகும்? இந்த தேசம் இயங்காதா? ஸ்தம்பித்துவிடுமா?
அவகள் பூட்டினால் அரசு அதற்கு மேல் இன்னொரு பூட்டு போட்டு பூட்டவேண்டும், ஆம் அரசு உடமையாக எடுத்து நடத்தலாம்
அரசு எத்தனை கல்வி நிலையங்களை, பல்கலை கழகங்களை எடுத்து நடத்துகின்றது,
அட கல்வி நிலையம் என்ன? சாராய வியாபாரமே நடத்துகின்றது, இந்த திரையரங்குகளை எடுத்து நடத்தினால் என்ன?
சும்மா எடுத்து நடத்த்தட்டும், என்ன குறைந்துவிடும், அரசு திரையரங்களாகட்டும்..
விருப்பம் இருந்தால் திறக்கட்டும் இல்லாவிட்டால் மொத்தாமாக தலைமுழுகட்டும், நாட்டுக்கு நிச்சயம் நல்லதுதான்.
ஜிஎஸ்டி முறை மிக துல்லியமாக வசூலிக்கபடவேண்டும், உணவு மருந்து சில ஆலய விவகாரம் தவிரம் எதற்கும் விதிவிலக்கு கூடாது
குறிப்பாக இந்த நித்தி, ஜக்கி, பால் தினகரன் வகையறாவிற்கெல்லாம் 80% ஜிஎஸ்டி என போட்டாலும் ஆதரிக்க இத்தேசம் தயார், அப்படித்தான் அந்த இம்சைகளிடமிருந்து இத்தேசம் பலன் பெற வேண்டும்
இத்தேசத்திற்கு அவர்கள் அப்படியாவது உபயோகமாக இருக்கட்டும்
உண்மையில் சில அற்ப விஷயங்களுக்காக சிலர் சொல்வார்கள், சொல்ல கூடாத இடத்தில் சொல்வார்கள், நீ இதனை ஏற்றுகொள்ளாவிட்டால் நாட்டினை விட்டு வெளியேறு என்பார்கள்
இப்பொழுது இதனை ஏற்றுகொள்ள மறுப்பவனிடம் தான் இதனை சொல்ல வேண்டும், இங்கு அப்படி சொல்ல வேண்டிய இடம் இதுதான்
எல்லா நாடுகளிலும், எல்லா முன்னேறிய நாடுகளிலும் வரி வசூல் அப்படி, பெரும் தொகையில் வசூலித்து பிழிந்துதான் அந்நாடுகள் ஜொலிக்கும், ஜிஎஸ்டியினை எதிர்ப்பவனை அப்படித்தான் சொல்ல வேண்டும், நாட்டை விட்டு வெளியேறினால்தான் அவனுக்கு இந்நாட்டின் அருமை புரியும்
இது சொல்ல வேண்டிய இடம் என்பதால் சொல்லலாம், இது இந்துக்கு ஒரு வரி, கிறிஸ்தவனுக்கும் முஸ்லீமுக்கும் ஒரு வரி, இந்தி பேசுபவனுக்கு ஒரு வரி, பேசாதவனுக்கு இன்னொரு வரி என்றல்ல, எல்லா இந்தியனுக்கும் ஒரே வரி
ஒரே கரன்சி, ஒரே வரி அவ்வளவுதான் விஷயம்
இந்த திட்டத்தை வரவேற்கின்றோம் , இத்தேசம் செழிக்க இப்படிபட்ட நல்ல விஷயங்களை ஆதரிப்பதே தேசகடமை, தேச பக்தியும் கூட
வந்தே மாதரம்..
ஜிஎஸ்டி நிறைவானதல்ல, மிகப்பெரிய தவறுகள் நிரம்பியது: ப.சிதம்பரம் கடும் சாடல்
அதற்கு என்ன அய்யா? இன்னும் இரு வருடத்தில் உங்கள் ஆட்சிதானே, அப்பொழுது அந்த தவறுகளை சரி செய்துவிட்டால் முடிந்து பிரச்சினை
எதும் சிறிய சலசலப்பு என்றாலும் "ஹேய்..ஹோய்ய்" என சதிராட்டம் ஆடுவார் தமிழிசை, கிரிக்கெட் கிரவுண்டில் ஆடும் சியர்ஸ் கேர்ள்ஸ் அப்பொழுது நினைவுக்கு வருவார்கள்
இப்பொழுது இந்த வானதி சீனிவாசன் பால சுப்பிரமணியன் பிரச்சினை பெரிதாக வெடித்திருக்கும் நிலையில், அமித்ஷா பெயர் எல்லாம், வானதி மீது பெரும் சர்ச்சைகள் எல்லாம் வரும் நிலையில் அம்மணியினை காணவில்லை
சியர்ஸ் கேர்ள்ஸ் பாத்திரத்திலிருந்து அம்மணி சாமியார் மடத்து மவுன சீடராகிவிட்டார்
"அவர் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாருடா
அந்த எரிமலையில் ஈரதுணி போட்டதாருடா.."
No comments:
Post a Comment