Monday, June 12, 2017

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது

இரு நாட்களுக்கு முன்பு, ஒரு தொப்புள் கொடி உறவு என சொல்லிகொள்ளும் இலங்கையர் ஒருவர் புன்னகை பூக்க சொன்னார், "எப்படி பார்த்தீயளே, இந்தியாவினை விரட்டி போட்டோம், இனி கிண்ணம் எங்கட நாட்டுக்குத்தான், கோப்பை கிடைக்காமல் போனாலும் உங்கள ஜெயிச்சு போட்டோம் பாத்தியளே" என கடும் உற்சாகத்தில் சொன்னார்


"பொறுத்து பாரும், கடைசியில் உங்களை அடித்து விரட்டிவிட்டு கோப்பையினை வென்று காட்டுவோம்" என சொல்லிவிட்டு வந்தேன்.


சொன்னபடி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.




அவரிடம் போட்ட சவாலில் பாதி வென்றாகிவிட்டது, மீதியும் வெல்ல டோனியாண்டவரும், கோலிபகவானும், யுவராஜ் சாமியும் துணையிருப்பார்களாக..


அடேய் தொப்புள்கொடி நிச்சயம் வென்று காட்டுவோம், அது அங்கே அமர்ந்து கைதட்டிய விஜய் மல்லையா மீது சத்தியம்



No comments:

Post a Comment