சாராயம் விற்கின்றது தமிழக அரசு, அதுதான் தமிழக வருமானத்தில் முதலிடம் என அதுவே ஒப்புகொள்கின்றது.
அந்த பணத்தில்தான் ஜெயலலிதாவிற்கு மெரீனாவில் மணி மண்டபம் கட்டபோகின்றார்களாம்..
இந்த லட்சணத்தில் போதை பாக்குகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு அது அனுமதித்தது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
இரட்டை இலையினை மீட்பது முதல் எவ்வளவு லஞ்சம் அவர்கள் கொடுக்க துணிந்தார்கள் என்றால் இப்படி அனுமதித்துதான்.
கூவத்தூரில் பணமழை கொட்டியது என்றால் காரணம் இம்மாதிரி மேகங்கள் தான்
மது ஆறாக ஓடும் மாநிலத்தில், துணையாறாக போதை பாக்குகளும் ஓடத்தான் செய்யும், மது காட்டாறு கண்களுக்கு தெரிந்தது, அதன் குட்கா துணையாறு இப்பொழுது தெரிகின்றது
இனி பூமிக்குள் ஓடும் நீர் போல , நம் கண்ணுக்கு தெரியாமல் கஞ்சா, அபின் என என்னவெல்லாம் ஓடுகின்றதோ தெரியவில்ல்லை
No comments:
Post a Comment