Monday, June 26, 2017

நண்பர் நெல்லைக்காரர் .....

பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneri அவர்களுக்கு இன்று பிறந்தநாள்


முகநூலில் எமக்கு நண்பர்கள் பல உண்டு எனினும், நம் மீது தனி நட்பு கொண்டவர் இந்த பெரியவர்.


எம் பதிவுகளை நான் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வது கிடையாது, மனதில் தோன்றுவதை எழுதி வைத்துவிட்டால் மறுபடி வாசிப்பது கூட இல்லை




நேரமின்மை, அவசரமாக பதிவிட்டுவிட்டு வேறுவேலைகளுக்கு செல்லுதல், இதனை பாதுகாத்து என்ன ஆக போகின்றது எனும் அலட்சியம் என பல காரணங்களால் அவற்றை புரட்டி பார்ப்பதில்ல்லை


ஆனால் நம் பதிவுகளையும் எடுத்து பாதுகாத்தவர், பாதுகாத்து கொண்டிருப்பவர் அவர். சில நேரங்களில் என் பெயரில் இருக்கும் அந்த பிளாக்கிற்கு சென்றால், சில பழைய பதிவுகளை கண்டால், நாமா இப்படியெல்லாம் எழுதினோம் என நமக்கே ஆச்சரியமாக இருக்கின்றது.


நண்பர் நெல்லைக்காரர் ஆனால் பெரும் பணியாற்றி ஐதரபாத்தில் வசிப்பவர்


அவரை பார்த்தது இல்லை, அவரின் குரல் கூட எனக்கு தெரியாது,


ஆனால் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போல பார்க்காமலே அது வளர்ந்துவிட்டது.


முகநூலில் எனக்கு கிடைத்த மிக நல்ல நட்புகளில், இன்னும் தொடர்ந்துவரும் நட்புகளில் அவர் முதன்மையானவர்


என் மீது நல்ல அபிமானம் கொண்ட , புரிந்துகொண்ட மிக மிக அரிதானவர்களில் அவரும் ஒருவர்


இறைவன் அவருக்கு எல்லா நலமும், ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் அருளட்டும்


குவிந்த கரங்களுடன் , நன்றி நிறைந்த மனதுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....



No comments:

Post a Comment