Friday, June 30, 2017

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால் , இன்னும் பிற...

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால்


விஷால் உருப்படியாக கேட்டிருக்கின்றார், ஆனால் வாட்டாள் கோஷ்டியிடம் இருந்து இன்னும் சத்தம் வரவில்லை ஏன்?


விசால் படங்களை மறித்தால் வசூல் ஒன்றும் தேறாது என விட்டுவிட்டார்களோ என்னமோ? பாகுபலி போன்ற வசூல் படங்களில் விஷால் நடித்திருந்தால் நிச்சயம் இப்போது குதிப்பார்கள்




ஆக வாட்டாள் நாகராஜின் போராட்டமும் வசூல் சார்ந்துதான் இருக்கின்றது.


அது இருக்கட்டும், விஷாலை அடிக்கடி தெலுங்கன் வந்தேறி என ஒரு கூட்டம் சொல்லும், அவர்களிடம் விஷால் இப்படி பேசிவிட்டாரே என சொன்னால் என்ன சொல்லும் தெரியுமா?


"இதனை ஏற்றுகொள்ள முடியாது, எங்கே இலங்கை சென்று தனி ஈழம் கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம்..?" என்பார்கள்


"அதனை நீங்கள் ஏன் சென்று இலங்கையில் கேட்க கூடாது?" என்றால் சத்தமிருக்காது..






தமிழக மீனவர்கள் 140 பேரை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர்


வேலையில்லா சீமானுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, ஒரு வாரத்திற்காவது இந்த வேலை இருக்கும்






"பா.ஜ.க. உருவாக்கும் திட்டங்கள் பாமரர்களுக்கானவை..” : பொன். ராதாகிருஷ்ணன்


பாஜக திட்டங்கள் சிந்திக்க தெரியாத‌ பாமரர்களை உருவாக்குபவை என்பதுதான் நிஜம், அதனை அன்னாரால் வாய்விட்டு சொல்ல முடியுமா?


அதனால் இப்படி சொல்லிவிட்டார், அவ்வளவுதான்




மற்றபடி அவர்கள் உருவாக்கும் திட்டம் எல்லாம் பாமரர்களை உருவாக்குமே அன்றி, பாமரர்களுக்கான‌ திட்டமே அல்ல என்பது யாருக்கு தெரியாது?









No comments:

Post a Comment