Saturday, June 24, 2017

அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??,






அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??,

முழுமையாக படிக்கவில்லை, மாறாக மோடியினை ஆதரித்ததற்காக வருத்தபடுகின்றேன் என அவர் சொன்னது மட்டும் பார்வைக்கு வந்தது.

அவரின் சொந்த மக்கள் கடந்துவந்த பாதையினை அறியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் மோடி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் வாழ்க என சொன்னவர் அவர்தான்.


தன் இனம் பெற்ற பல காரியங்களுக்கானவர்க்ளை மறந்து, அந்த நன்றி கடனை மறந்து, அல்லது மறைத்து அவர் அந்த கும்பலுக்கு ஆதரவாக பேசிய பல கருத்துக்கள் கண்டனத்திற்குரியவை, நன்றி மறந்தவை.

அவரின் சமூகத்திற்கு இந்த நாட்டின் அதிகார கும்பல்கள் செய்ததை விட, போர்த்துகீசியரும், டச்சுகாரரும், பிரெஞ்சுக்காரரும், பிரிட்டாணியரும் செய்த காரியங்கள் மிக அதிகம், அந்த உதவி கொஞ்சம் அல்ல, ஆனால் அதனையெல்லாம் மறந்தவர் அந்த ஜோ

அந்த மீணவ இனம் கடந்து வந்த பாதையினை அவர் சரியாக படித்திருந்தாலே அந்த கும்பலுக்கு பல்லக்கு தூக்கியிருக்க மாட்டார்

இப்பொழுது அதற்கு வருத்தபடுகின்றாராம், முழு வரலாறையும் முழுதும் படிக்கட்டும் கண்ணீர் விடும் அளவிற்கு வருத்தபடுவார்

அவர் வருத்தபடட்டும்..

சொந்த வரலாறே சரியாக தெரியாத அவருக்காக நாமும் வருத்தபடுவோம்




 

 



 

No comments:

Post a Comment