Tuesday, June 20, 2017

அசைவம் உண்டால் புற்றுநோய் வரும் : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

அசைவம் உண்டால் புற்றுநோய் வரும் : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

சைவராக இருந்து ஆத்திகம் பேசிய ரமண மகரிஷிக்கு கூட புற்றுநோய் வந்தது, அசைவத்தால் புற்றுநோய் வராது என்றால் பூனூல் பிராமணர் உட்பட சைவ உணவுக்காரர் யாருக்கும் வந்திருக்க கூடாது

96 வயதுவரை வாழ்ந்த பெரியார் உண்ணாத அசைவ உணவு கிடையாது


இந்த அமைச்சர் எந்த கல்லூரியில் இந்த ஆராய்ச்சியினை செய்தார் என தெரியவில்லை, 60 வருடமாக பெரும் போராட்டத்தை புற்றுநோய்க்கு எதிராக எடுக்கும் விஞ்ஞானிகளுக்கு தெரியாததெல்லாம் இவருக்கு தெரிகின்றது.

மோடியினை சுற்றி பல கோமாளிகள் இருக்கின்றனர் என்பது தெரிகின்றது

தமிழக அமைச்சர்களின் தெர்மாகோல் முதலான விளையாட்டு ஒருபுறம், இம்மாதிரியான காமெடி மத்திய அமைச்சர்கள் ஒரு புறம்

நமக்கு மாநில அரசும் ஒழுங்காக வாய்க்கவில்லை, மத்திய அரசு அமைச்சர்கள் அதனை விட மோசம்

No comments:

Post a Comment