திமுகவினர் மறியல் செய்ய ரோடு அவங்க அப்பன் வீட்டு சொத்தா : நடிகை கஸ்தூரி
கலைஞர் பாணி பதில் இப்படி இருக்கும்....
"ஆம், இது எங்கள் பகுத்தறிவு தந்தை பெரியார் மண்ணின் சொத்து, எங்கள் அண்ணாவின் மண்ணின் சொத்து, அதில் அவர்கள் வழிவந்த நாங்கள் அமராமல் எங்கிருந்தோ மாடுமேய்க்க வந்த ஆரிய கூட்டமா அமரும்?
காரோடு சாலை, ரயிலோடும் தண்டவாளத்தில் எல்லாம் அமர்ந்து நியாயம் கேட்டது நம் இயக்கம், அப்படித்தான் அமர்ந்தோம்.
தமிழகம் வாழ, நியாயம் கிடைக்க, ஜனநாயகம் தழைக்க நாம் சாலையில் அமர்ந்தால், சாலையோரத்து சாரைபாம்பு ஏன் சலசலக்கின்றது?
அண்ணா சொன்னதையே இவருக்கு சொல்கின்றேன்
"சாலையோரத்தில் வேலையற்றதுகள்"
இது ஜனநாயக நாடு, நடுரோட்டில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து கஸ்தூரி அவர் கருத்தை சொன்னார், அதனை புறந்தள்ளிவிட்டு செல்லலாம் அல்லது எதிர்கருத்தினை சொல்லலாம்
மிக ஆபாசமாகவும், அருவெருப்பாகவும், இல்லாத கற்பனைகளை அள்ளி தெளித்தும் அவரை திட்டுவது நாகரீகமாகாது
குமுதம் பத்திரிகையினை கண்டித்துவிட்டு, கஸ்தூரி மீது சேறினை எறிவது திமுகவின் நாகரீகமாக இருக்க முடியாது.
ஆதாரமற்ற அசிங்கமான சர்ச்சைகளில் அந்த பெண்ணை இணைத்து பேசுவதும், எழுதுவதும் கண்டிக்கதக்க விஷயங்கள்
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம், அல்லது கண்டித்துவிட்டு நகரலாம்
இல்லாத கற்பனைகளை எல்லாம் திரட்டி ஒரு பெண்ணை அசிங்கபடுத்த யாருக்கும் உரிமையில்லை
இந்த முகநூலில் திமுகவிற்கு ஒரு தொழில்நுட்ப பிரிவு இருக்கின்றது என்கின்றார்கள், அப்படி இருந்து அதற்கொரு "செயல் தலைவர்" இருந்தால், இம்மாதிரியான நாகரீகமற்ற பதிவுகளை கண்டிப்பது நல்லது.
No comments:
Post a Comment