Monday, June 19, 2017

ஸ்டாலினுக்கு உள்ள தகுதி எனக்கும் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

"ஸ்டாலினுக்கு உள்ள தகுதி எனக்கும் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி


எப்படி இருக்கின்றது


பெரியார் கைகளில் தவழ்ந்து, அண்ணா மடியில் விளையாடி, எம்ஜிஆர் தோளில் விளையாடி, கலைஞர் கைபிடித்து வளர்ந்தவன் நான் என மு.க ஸ்டாலின் சொல்லலாம்




காலம் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கிற்று


அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் என எல்லோரையும் அருகிருந்து பார்த்து வளர்ந்தவர் ஸ்டாலின், நிச்சயம் அது பெரும் வரம்


காமராஜர் மிசா காலம் , எம்ஜிஆர் காலம் , ஜெயாகாலம் என எல்லாம் பார்த்து வந்திருப்பவர்,, எல்லா சூழலும் கண்டிருப்பவர், மொழிப்போர் முதல் நேற்றைய போராட்டம் வரை களம் கண்டவர்


எல்லா தலைவர்களையும் பார்த்து பழகி வளர்ந்த அரசியல்வாதி அவர், இன்னும் ஸ்டாலின் வேகம் எடுக்கவில்லை. இப்படி எல்லாம் பேசி எனக்கிருக்கும் தகுதி எவனுக்கு இருக்கின்றது? என கேட்டால் யார் பதில் சொல்ல முடியும்?


பழனிச்சாமியின் அனுபவம் என்ன?


ஜெயா முன் குனிந்து நின்றேன், சசிகலா முன் கைகட்டி நின்றேன் என சொல்வதை தவிர என்ன இருக்க முடியும்?


மிஞ்சி போனால் இன்னும் 3 ஆண்டு அது கூட முடியுமோ முடியாதோ?


அதற்குள் நான் ஸ்டாலினுக்கு சரி தகுதியானவர் என சொல்கின்றார் பழனிச்சாமி


பழனிச்சாமிக்கு என்ன ஆனது?


போயஸ் தோட்டத்து வாட்ச் மேன், புல் வெட்டுபவன் எல்லோரிடம் சென்று சொல்ல வேண்டியதை ஸ்டாலினுக்கா சொல்வார்?


தினகரன் வெளிவந்ததிலிருந்தே மனிதர் ஒருமாதிரிதான் திரிகின்றார்






விபரீதமான போராட்டம் நடத்துவோம் : அன்புமணி எச்சரிக்கை


மரம் வெட்டுதல், மாமல்லபுரம் கோயில் கோபுரம் மீது ஏறுதலை தவிர என்ன போராட்டம் தெரியும்?


மதுரை , ராஜபாளையம் கோவில் கோபுரங்களில் ஏறும் விபரீத திட்டம் திட்டம் இருக்குமோ?




விபரீத போராட்டம் என சொல்லி உயர் அழுத்த மின் கம்பங்களில் ஏறினால் தமிழகத்திற்கு நல்லது.







 


No comments:

Post a Comment